பிறந்தநாள் அன்று ஆபிஸ் கிளம்பும் கோபி, கோவத்தில் ஈஸ்வரி – “பாக்கியலட்சுமி” சீரியலில் திடீர் திருப்பம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி பிறந்தநாள் விழாவில் ராதிகாவை எப்படி பார்க்காமல் இருப்பது என தெரியாமல் குழப்பமாக இருக்கிறார். இந்நிலையில் கோபி பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாமல் தப்பிக்க ஆபிஸ் வேலை இருப்பதாக சொல்கிறார். அதை கேட்டு ஈஸ்வரி கோவப்பட்டு கோபியை திட்டி விடுகிறார்.
மகா சங்கமம்:
இன்று “மகா சங்கமம்” சீரியலில், கோபி ராமமூர்த்தியின் பிறந்தநாளுக்கு ராதிகா உடன் வராமல் இருக்க பல வேலைகளை செய்து தப்பித்து விடுகிறார். ஆனால் அவர் வீட்டில் இருக்கும் போது பிறந்தநாள் விழாவிற்கு ராதிகா வந்தால் பார்த்து விடுவார் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. மேலும் வீட்டில் நிறைய போட்டோ இருப்பதால் அதை பார்த்து ராதிகாவுக்கு உண்மை தெரிந்து விடும். பல முறை புகைப்படங்களை கழட்டி இருப்பதால் இப்போது கழட்டினால் அனைவருக்கும் சந்தேகம் வரும்.
ஷூட்டிங் நேரத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகைகள் செய்த காரியம் – ரசிகர்கள் உற்சாகம்!
அதனால் கோபி அலங்காரம் செய்யும் நபர்களை அழைத்து போட்டோவை மறைத்து அலங்காரம் செய்கிறார். பின் ஆபிஸ் வேலை இருப்பதாக சொல்லி கிளம்பலாம் என கோபி முடிவு செய்கிறார். அதை எப்படி சொல்வது சொன்னால் எல்லாரும் எப்படி நினைப்பார்கள் என நினைத்தே கோபிக்கு டென்ஷன் வருகிறது. இந்நிலையில் கோபி ஈஸ்வரியிடம் எனக்கு ஆபிசில் முக்கியமான வேலை இருக்கிறது. நான் சென்று பார்த்து விட்டு உடனே வருகிறேன் என கிளம்புகிறார்.
Exams Daily Mobile App Download
ஆனால் ஈஸ்வரி பயங்கரமாக கோவப்பட்டு உனக்கு இப்படி சொல்ல எவ்வளவு தைரியம், அடுத்த வருடம் பிறந்தநாளுக்கு அவர் இருப்பாரோ என்னவோ இந்த வருஷம் நீ இருக்க வேண்டும் என சொல்கிறார். பின் கோபி இப்படி எல்லாம் பேசாதீங்க என சொல்ல, போன வருஷம் நல்ல இருந்தவர் இப்போது இப்படி இருக்கிறார். இந்த வருஷம் என்ன ஆகுமோ என கேட்கிறார். அதை கேட்டு கோபிக்கு என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறது. இதனால் கோபி மாட்டிக் கொள்வாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.