கோபியை விட்டு விலகும் ராதிகா – பல திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்! ரசிகர்கள் உற்சாகம்!
ராதிகாவுடன் கோபி சிரித்து சிரித்து பேசி கொண்டிருப்பதை எழில் பார்த்துவிடுகிறார். இதற்கு பிறகு அனைத்து உண்மைகளும் ராதிகாவிற்கு தெரிந்து கோபியை விட்டு ராதிகா பிரிந்து செல்லும் படியாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தன்னை கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டிருக்கும் பாக்கியாவை விட்டுவிட்டு ராதிகாவை திருமணம் செய்ய கோபி துடித்துக் கொண்டிருக்கிறார். இரவு நேரங்களில் கூட வீட்டிற்கு வராமல் ராதிகா வீட்டிலேயே கோபி தங்குகிறார். கோபி வருவார் வருவார் என எதிர் பார்த்து தூங்காமல் பாக்கியா காத்துக்கொண்டிருக்கிறார். இதனை பற்றி துளி கூட கவலைப்படாமல் ராதிகாவின் வீட்டில் கோபி உறங்கிக் கொண்டிருக்கிறார்.
தனது இரு குழந்தைகளுடன் இணைந்த கண்ணம்மா – சீரியலில் இனி வரும் எபிசோட்!
இந்நிலையில் தன்னுடன் படிக்கும் பிள்ளைகள் அனைவரும் வெளியே சென்று ஜாலியாக விளையாடுகிறார்கள். என்னையும் வெளியே எங்கேயாவது கூட்டி செல்லுங்கள் என மயூ அடம் பிடிக்கிறார். உடனே கோபியும் மயூ மற்றும் ராதிகாவை வெளியே கூட்டி செல்கிறார். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் பாக்கியாவின் குடும்பத்தில் உள்ள அனைவரும் அங்கு செல்கின்றனர். ராதிகாவுடன் கோபி மகிழ்ச்சியாக சிரித்து பேசுவதை எழில் பார்த்துவிடுகிறார்.
இதற்கு பின்பு பாக்கியாவிற்காக எழில் சண்டை போடும்படியாக கதைக்களம் மாறவுள்ளது. இதன் பின்பு அனைத்து உண்மைகளையும் ராதிகாவிற்கு தெரியவருகிறது. இத்தனை நாட்களாக என்னையும் மயூவையும் ஏமாற்றிவிட்டீர்கள் என கோபியை விட்டு பிரிந்து செல்கிறார். இதுவரை வீட்டிலும் நல்ல பெயர் எடுத்து வந்த கோபியின் முகத்தை பார்க்கவே குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. கோபியின் மீது இருந்த மொத்த சந்தேகமும் பாக்கியாவிற்கு போய்விடுபடியாக தான் கதைக்களம் வேறு கோணத்தில் பயணிக்க உள்ளது.