‘கோபி பாக்கியாவின் கணவர் என்ற உண்மையை தெரிந்து கொண்ட ராதிகா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு குடும்பத் தலைவியின் உணர்வுகளை கூறும் விதமாக கதை இருப்பதால், இது வீட்டில் இருக்கும் பெண்களை மட்டுமல்லாமல் பல தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை நோக்கி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
ட்விஸ்ட் எபிசோட்:
பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியின் படு ஹிட்டான தொடர். இதில் பாக்கியா என்ற கதாபாத்திரத்திற்கு தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது, அதே சமயம் அவரது கணவராக நடிக்கும் கோபிக்கு பெரிய எதிர்ப்பு இருக்கிறது. சமூக வலைதளங்களில் பலரும் தகாத முறையில் திட்டி வருகிறார்கள், தொடரை பொழுதுபோக்காக மட்டும் பாருங்கள், இப்படியெல்லாம் திட்ட வேண்டாம் என அவர் பல முறை வீடியோ வெளியிட்டு விட்டார். ஆனால் அவர் மீது மக்கள் நிஜமாகவே வெறுப்பு காண்பிப்பது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான். இத்தனை நாட்களாக தனது குடும்பத்தை ஏமாற்றி வரும் கோபியின் உண்மை முகம் அனைவருக்கும் தெரிய வர இருக்கிறது.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பிரபலத்திற்கு திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து மழை!
கோபியின் அப்பா, எழில் ஆகியோருக்கு கோபியின் உண்மை முகம் முன்னதாக தெரியும். இந்த வரிசையில் மூர்த்தி தனம் தம்பதியருக்கு தெரிய வந்து உள்ளது. இதையடுத்து மூர்த்தி கோபியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த கோபி, மூர்த்தி குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியே போங்க என்று சொல்லி விட்டார். இதை தொடர்ந்து மூர்த்தி தனம், பாக்கியாவின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ராதிகாவின் வீட்டிற்கே சென்று நீங்கள் நினைப்பது போல் கோபி நல்லவர் கிடையாது, அவரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவர் குடும்பத்தை ஒரு முறையவது பாருங்க என மறைமுகமாக சொல்லிவிட்டு சென்றனர். இதனால் ராதிகாவுக்கு கோபியின் மீது சந்தேகம் எழுந்து உள்ளது, எனவே கோபிக்கு உடனே போன் செய்து வீட்டிற்கு வர சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
கோபி வந்தவுடன் நான் உங்க குடும்பத்தை பார்க்கணும், உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க என்று கேட்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோபி எதுக்கு திடீர்னு இப்படி கேக்குற என கோபி கேட்க, காரணம் என்னனுல கேட்காதீங்க, உங்க குடும்பத்தை நான் பாக்கணும் என்று திட்டவட்டமாக ராதிகா கூறிவிட்டார். ஆனால் கோபி நான் உன்னை என் குடும்பத்தை பார்க்க அழைச்சுட்டு போக மாட்டேன் என சொல்லி விடுகிறார். இதனால் கோபமடைந்த ராதிகா, கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார். இதை அடுத்து ராதிகா, பாக்கியா தான் கோபியின் மனைவி என்பதை அறிந்து விடுவதாகவும் தொடர்ந்து ராதிகா கோபியை வெறுத்து விடுவார் என்ற நோக்கில் கதை நகரும் என இணையத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.