கோபி பற்றிய உண்மையை கூறி விட்டு மரணம் அடையும் ராமமூர்த்தி – வெளியான தகவல்!ரசிகர்கள் ஷாக்!
இன்று வெளியாகியுள்ள பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து அடுத்து நடக்கவிருக்கும் எபிசோட் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் வீட்டிற்கு தெரியாமல் கோபி முன்னாள் காதலி ராதிகாவுடன் பழகி வருகிறார். எதிர்பாராத விதமாக கோபியின் மனைவி யும் ராதிகாவும் தோழியாகி விடுகின்றனர். இந்த விஷயம் தெரிந்து கோபி அதிர்ச்சி அடைந்து விடுகிறார். பாக்கியா விற்கு தெரியாமல் ராதிகா வீட்டிற்கு சென்று வருவது, அவரும் வெளியில் செல்வது இப்படி பழகி வருகிறார். இதை எழில் பார்த்து விடுகிறார் அப்பாவை எச்சரிக்கையும் செய்கிறார். அப்போதும் கோபி ராதிகாவை சந்திப்பதை நிறுத்தவில்லை.
சக்தியை விட்டு பிரிய முடிவெடுக்கும் வருண், அதிர்ச்சியில் அப்பா – வெளியான ப்ரோமோ!!
ராதிகா புது கார் வாங்கி அதை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு செல்கிறார். அதே நேரத்தில் கோபியின் தந்தையும் அதே கோவிலுக்கு வருகிறார். ராதிகாவுக்கு மகன் கோபி குங்குமம் வைப்பதை கண்ணால் பார்த்து விடுகிறார். பயங்கர கோபத்தில் வீட்டிற்கு வந்து கோபியை அடித்து விடுகிறார். கோபி பாக்கியாவின் கணவன் என்ற உண்மையை ராதிகாவிடம் சொல்ல முயன்று வருகிறார். ஆனால் சொல்ல முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது. இந்த நேரத்தில் கோபியின் அப்பா திடீரென ஊருக்கு சென்று உயில் எழுத முடிவு செய்கிறார்.
தனது சொத்துக்களை தனது பேரக் குழந்தைகளும் மருமகள் பாக்கியாவிற்கும் எழுதி வைத்து விடுகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ராமமூர்த்தி கோபி பற்றிய மொத்த உண்மையையும் குடும்பத்திடம் சொல்கிறார். இனி அடுத்து வரும் எபிசோடுகளில் ராமமூர்த்தி நடந்து செல்லும் போது மயங்கி விடுவார் என்றும் அவருக்கு மாராடைப்பு ஏற்பட்டு மரணம் அடைவது போல காட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.