சக்தியை விட்டு பிரிய முடிவெடுக்கும் வருண், அதிர்ச்சியில் அப்பா – வெளியான ப்ரோமோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மௌன ராகம்’ சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
மௌன ராகம் சீரியல்
விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ‘மௌன ராகம்’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் குழந்தையின் உணர்வுகளை மிகவும் அழகாக எடுத்து காட்டி வருகிறது இந்த சீரியல். தற்போது இதில் கார்த்திக் மல்லிகா தான் தனது மனைவி என்று அனைவரிடமும் கூறி விடுகிறார். இதனால் சக்தி தனது அம்மா மற்றும் அப்பா இருவரும் சந்தோசமாக இருப்பதை பார்த்து மகிழ்ச்சியில் இருக்கிறார்.
குழந்தை பிறந்த கையோடு அஞ்சலியுடன் ஆட்டம் போட்ட நடிகை பரினா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
இருந்தாலும், சக்தி திருமணம் செய்து கொண்டதை நினைத்து மல்லிகா கோபம் அடைந்து அவரை விட்டு சென்று விடுகிறார். இப்படி பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் சக்தி தன்னை வெறும் 5 லட்சம் ரூபாய்க்காக தான் திருமணம் செய்து கொண்டார் என்றும் அதனால் தனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை என்று கூறுகிறார். தனது மதிப்பு வெறும் 5 லட்சம் தானா என்றும் கேட்டு சண்டை போடுகிறார். இதற்கு தான் திருமணம் செய்து கொள்ளாமல் மரணம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறுகிறார்.
இதனை கேட்கும் வருணின் அப்பா மிகவும் கவலை அடைந்து விடுகிறார். அது ஒரு புறம் இருந்தாலும், சக்தி வருண் கூறிய வார்த்தைகளை கேட்டு நொந்து போய் விடுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது. ஏற்கனவே சக்தி தனது சிறு வயதில் இருந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அவரது போரட்டம் தற்போது வரை நீடிக்கிறது என்று தான் கூற வேண்டும். வருண் சக்தியின் தியாகத்தை புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.