பாக்கியா மீது புகார் கொடுக்கும் கோபி, அதிர்ச்சியில் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!
கோபியை ராதிகாவின் அண்ணன் சந்துரு திருமண வேலைகளை கவனிக்க சொல்லிவிட்டார். எப்படியும் பாக்கியா திருமணத்திற்கு தடையாக இருப்பார் என நினைத்து பாக்கியா மீது கோபி புகார் கொடுக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை ராதிகா மன்னித்து திருமணம் செய்துகொள்ள போகிறாரா அல்லது கோபி மறுபடியும் பாக்கியாவுடன் சேர்ந்து வாழ போகிறாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. என்ன தான் கோபியை விட்டு விலக வேண்டும் என ராதிகா நினைத்தாலும் முழுமையாக கோபியை விட்டு விலக முடியவில்லை. இதனால், கொஞ்ச நாள் அமைதியாக இருங்கள் என கோபியிடம் ராதிகா கூறியிருக்கிறார்.
திருமணத்திற்கு தயாராக இருக்க கோபியிடம் கூறும் சந்துரு, அதிர்ச்சியில் பாக்கியா – புதிய திருப்பங்கள்!
பின்னர், ராதிகா அவரது அண்ணன் மற்றும் அம்மாவிடம் கோபியின் நிலைமையை பார்த்தால் பாவமாக இருக்கிறது. என்னால் தான் அவர் அவருடைய குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார் என கூறுகிறார். பின்னர், ராதிகாவின் அண்ணன் கோபியை சந்தித்து பேசுகிறார். அதாவது, ராதிகா எப்படியும் உங்களை விட்டு செல்ல மாட்டார். எனவே, தயங்காமல் திருமணத்திற்கான வேலையை செய்யத் துவங்குங்கள் என கூறுகிறார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
பின்னர், கோபியிடம் பேசியதை குறித்து சந்துரு ராதிகாவின் அம்மாவிடம் கூறுகிறார். ராதிகாவை எப்படி சம்மதிக்க வைக்க போகிறாய் என ராதிகாவின் அம்மா சந்துருவிடம் கேட்கிறார். அதற்கு சந்துரு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு கடைசி நேரத்தில் மேடையில் வந்து உட்கார் என்று கூறினால் ராதிகா மறுக்கவா போகிறார் என சந்துரு கூறுகிறார். பின்னர், இந்த விஷயத்தை ஈஸ்வரியிடமும் சொல்லிவிடலாம் என கோபி நினைக்கிறார். மேலும், பாக்கியா கண்டிப்பாக திருமணத்தை நிறுத்த எதாவது பிளான் செய்வார் என நினைத்து பாக்கியா மீது கோபி பொய் புகார் கொடுக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
பன்னிமூஞ்சி பாக்யாவை சிறைக்குள் பார்க்கவே சந்தோஷமாகஇருக்கிறது அங்கேயே அவளை காவலர்கள் அடித்து கொன்றுவிட்டால் நல்லது…