திருமணத்திற்கு தயாராக இருக்க கோபியிடம் கூறும் சந்துரு, அதிர்ச்சியில் பாக்கியா – புதிய திருப்பங்கள்!
ராதிகா எதற்காக கோபியை விட்டு விலக நினைக்கிறார் என்பதை சந்துரு தெளிவாக புரிந்து கொள்கிறார். இந்நிலையில், சந்துரு கோபியை சந்தித்து திருமண வேலைகளை எந்த தயக்கமும் இல்லாமல் ஆரம்பியுங்கள் என கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என ராதிகா மிகவும் புலம்பி கொண்டிருக்கிறது. அதாவது, ராதிகாவுக்காக கோபி குடும்பத்தை விட்டு பிரிந்து வந்ததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். ஆனாலும், கோபியை முழு மனதோடு ராதிகாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தற்போது வரைக்கும் ராதிகாவை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கோபி கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், துபாய் செல்லும் பிளானை கேன்சல் செய்துவிட்டு ராதிகா, முதலில் படித்த பள்ளியிலேயே மயூவை சேர்த்துவிடுகிறார். அப்போது ராதிகா கோபியை சந்தித்து பேசுகிறார். அங்கு கோபி ராதிகாவிடம் நீ இல்லையெனில் செத்துவிடுவேன் என கூறுகிறார். உடனே, ராதிகா என்னால் உடனடியாக எந்த பதிலையும் தெரிவிக்க முடியாது. கொஞ்சம் நாள் பொறுமையாக இருங்கள். எல்லாமே நல்லதாகவே நடக்கும் என கூறிவிட்டு ராதிகா கிளம்பிவிடுகிறார். பின்னர், வீட்டிற்கு வந்து ராதிகா, அம்மா மற்றும் அண்ணனிடம் சொல்லி புலம்புகிறார்.
தமிழகத்தில் நாளை (செப்.03) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழு விவரம் இதோ!
எனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. என்னால் முழு மனதோடு கோபியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறுகிறார். நாமே கோபியிடம் இது பற்றி பேசலாம் என ராதிகாவின் அண்ணன் சந்துரு கோபியை சந்திக்க செல்கிறார். அப்போது கோபியிடம் கண்டிப்பாக ராதிகா கொஞ்ச நாட்களில் உங்களை தேடி வந்துவிடுவார். இதனால் நீங்கள் திருமண வேலைகளை கவனியுங்கள் என கூறுகிறார். ஆனால், கோபி அது எப்படி நடக்கும் ராதிகா கண்டிப்பாக ஒப்புக்கொள்ளவே மாட்டார் என கூற, ராதிகாவை சம்மதிக்க வைப்பது என்னுடைய பொறுப்பு என சந்துரு கோபியிடம் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்