“பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகாவிற்கு திருமணம், கோபிக்கு அம்மா வைத்த செக் – அடுத்து வரும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் யாரும் எதிர்பாராத பல ட்விஸ்ட்கள் நடந்து வரும் நிலையில், இன்றைய எபிசோடில் கோபியே எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று நடந்துள்ளது. அது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் சென்ற வாரம் குடும்பத்துடன் சொந்த கிராமத்திற்கு சென்று பொங்கல் பண்டிகை கொண்டாடி இருக்கின்றனர். அதில் இனியாவின் போனில் மயூரா கோபியை பார்க்க கோபி சிக்கி விட்டார் என ரசிகர்கள் சந்தோசமாக இருந்தனர். ஆனால் அது நடந்தால் தான் சீரியல் கிளைமாக்ஸ் வந்து விடுமே, அதனால் அப்போதும் கோபி பொய் சொல்ல ராதிகாவும் அதை நம்பி விடுகிறார். ஆனால் கோபி நடந்து கொள்வதை எல்லாம் பார்த்து பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது.
விவகாரத்திற்கு பின் மீண்டும் இணையும் சமந்தா, நாக சைதன்யா ஜோடி? ரசிகர்கள் குழப்பம்!
பாக்கியா எப்போது கொந்தளிப்பார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு, அது நடக்க பல எபிசோடுகள் இருக்கிறது. இன்றைய எபிசோடில் ராதிகாவின் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு வர அப்போது மயூராவை கோபி வெளியே அழைத்து சென்றிருக்கிறார். அந்த நேரம் கோபியும் வர சொந்தகாரர்கள் சந்தேகமாக பார்க்கின்றனர். ராதிகா அம்மா கோபியை அறிமுகம் செய்து, இவர் தான் ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போகிறார் என சொல்ல அதை கேட்ட மயூரா அதிர்ச்சி அடைகிறார்.
கீதாவிடம் வசமாக சிக்கிய சரஸ்வதி, அடுத்து வரும் ட்விஸ்ட் – “தமிழும் சரஸ்வதியும்” ப்ரோமோ ரிலீஸ்!
அவர் மட்டும் அதிர்ச்சி அடைகிறார் என நினைத்தால் இது கோபிக்கே அதிர்ச்சியாக தான் இருக்கிறது. எப்போது கல்யாணம் என கேட்க, சீக்கிரமாக என ராதிகாவின் அம்மா சொல்கிறார். அதை கேட்டும் மயூரா மற்றும் கோபிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இவரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என சொல்ல, கோபி இன்னும் அதற்கான எந்த முயற்சியும் நாம எடுக்கவில்லையே என நினைக்கிறார். பின் வீட்டிற்கு வந்த கோபி இனியாவை பற்றி கேட்க, காரில் சாப்பாடு பை எடுக்க சென்ற பாக்கியா காரில் சாக்லெட் கவருகளை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இதனால் இனி என்னவெல்லாம் நடக்க இருக்கிறது என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.