விவகாரத்திற்கு பின் மீண்டும் இணையும் சமந்தா, நாக சைதன்யா ஜோடி? ரசிகர்கள் குழப்பம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா, சில மாதங்களுக்கு முன் தனது காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிய இருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். தற்போது அந்த பதிவு நீக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் மீண்டும் இணைய இருக்கிறார்களா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
நடிகை சமந்தா விவாகரத்து:
சினிமா பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் முன்னணி நடிகைகளின் ஒருவராக சமந்தா தனது கணவரை பிரிய இருப்பதாக அறிவித்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவரை பிரிந்ததாக சொல்லி பல மாதங்கள் ஆன நிலையில் அதிகமான மன அழுத்தத்தில் இருந்த சமந்தா சமூக வலைத்தளங்களில் அது குறித்த பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
கீதாவிடம் வசமாக சிக்கிய சரஸ்வதி, அடுத்து வரும் ட்விஸ்ட் – “தமிழும் சரஸ்வதியும்” ப்ரோமோ ரிலீஸ்!
சமந்தா பல படங்களில் கவர்ச்சியாக நடித்ததால் நாக சைதன்யா குடும்பத்தாரிடம் மனக்கசப்பு ஏற்பட்டதே அவர்களின் விவாகரத்திற்கு காரணமாக இருந்து வருகிறது. விவாகரத்து ஒரு பக்கம் இருந்தாலும் பல படங்களில் நடிக்க சமந்தா ஒப்புக் கொண்டுள்ளனர். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் பாடல் ஒன்றில் ஆடிய சமந்தாவிற்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் வந்தது. அடுத்ததாக காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்கள் வெளிவர இருக்கிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் ஐஸ்வர்யா காதலர்களா? வீடியோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் சமந்தா விவாகரத்து குறித்து பதிவிட்ட பதிவை நீக்கி இருக்கிறார். அதனால் சமந்தா நாக சைதன்யா மீண்டும் சேர இருக்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இருவரும் 10 வருடங்களாக நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறி தற்போது திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து 4 வருடத்தில் பிரிவு என்பது முடிவாக இருக்காது என்பதால் ரசிகர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து இருக்கின்றனர்.