விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ஜெனி, ஈஸ்வரி, இனியாவுடன் இணைந்த அமிர்தா!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்போது ராதிகாவின் மகள் மயூவின் பிறந்த நாள் கொண்டாட்டம் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகி வர, இதை தொடர்ந்து இந்த சீரியலின் கதைக்களம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் சில எதிர்பாராத சம்பவங்கள் நடந்தேறி வருகிறது. அந்த வகையில் கோபி பற்றிய உண்மையை அறிந்திருந்த ஒரே ஆளான ராமமூர்த்தி படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து வாய் பேசமுடியாமல் போகிறார். இவரை சரி செய்ய வரும் பிசியோதெரபிஸ்ட் ரஜினிகாந்த் மீது இனியாவுக்கு ஒரு ஈர்ப்பு வருகிறது. மறுபக்கத்தில் ராதிகாவின் மகள் மயூவிற்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட, அங்கு ராதிகாவின் கணவர் ராஜேஷ் வந்து ரகளை செய்கிறார்.
அப்போது ராதிகா, கோபியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அவரது அம்மா கூற, ஒரு சில பிரச்சனைக்கு பின் ராஜேஷ் அங்கிருந்து கிளம்புகிறார். இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் கோபியின் விவாகரத்து சம்பந்தமாக ராதிகா, கோபி இருவரும் ஒரு அதிகாரியை சந்திக்கின்றனர். தொடர்ந்து விவாகரத்து பத்திரத்துடன் வீட்டிற்கு வரும் கோபி எப்படி பாக்கியாவிடம் அதில் கையெழுத்து வாங்க போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் இந்த சீரியலின் கதைக்களம் நகர்ந்து வருகிறது.
விஜய் டிவி விஜே மணிமேகலைக்கு இவ்வளவு சொத்துக்களா? ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்!
இதற்கிடையில் கோபி, பட்டு வேஷ்டி சட்டையணிந்து மாப்பிள்ளை தோரணத்தில் வெளியிட்ட புகைப்படம் ராதிகாவிற்கும், கோபிக்கும் திருமணம் ஆகப்போகிறதா என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி இருந்தது. இந்நிலையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலுக்கான அப்கம்மிங் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அமிர்தா, ஈஸ்வரி, ஜெனி, இனியா ஆகியோர் ஒரு பீச்சில் இருப்பதை போல சில காட்சிகள் இடம்பிடித்துள்ளது. இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம் என்னவாக இருக்கும் என்று சிந்திக்க துவங்கியுள்ளனர்.