முடிவை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ தொடர் – விரைவில் சீசன் 2 அறிமுகம்!

0
முடிவை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் 'பாக்கியலட்சுமி' தொடர் - விரைவில் சீசன் 2 அறிமுகம்!
முடிவை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் 'பாக்கியலட்சுமி' தொடர் - விரைவில் சீசன் 2 அறிமுகம்!
முடிவை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ தொடர் – விரைவில் சீசன் 2 அறிமுகம்!

பாக்கியாவிற்கு கோபியை பற்றிய அனைத்து உண்மைகள் தெரியவருமா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாக்கியலட்சுமி சீரியல் முடிவடைய போவதாகவும், விரைவில் சீசன் 2 தொடர் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியாவிற்கு கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் தெரியவருமா, உண்மைகள் தெரிய வந்த பிறகு ராதிகாவிற்கு கோபியை விட்டுக் கொடுக்கப் போகிறாரா அல்லது கோபி எனக்கு மட்டும் தான் சொந்தம் என உரிமை கொண்டாட போகிறாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பாக்கியாவின் நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கோபி பாக்கியாவின் கண்ணுக்கு முன்னாடியே கோபி தவறு செய்து கொண்டிருக்கிறார்.

பிரசவத்திற்கு பிறகு மீண்டும் ராஜா ராணி 2 சீரியலில் இணையவுள்ள ஆலியா – குஷியில் ரசிகர்கள்!

ஒரு பெண் இந்த அளவுக்கு அப்பாவியாக இருக்கவே கூடாது என ரசிகர்கள் பாக்கியாவிற்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கின்றனர் . என்னதான் பாக்கியா கோபியை விழுந்து விழுந்து கவனித்தாலும் ராதிகாவை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென கோபி துடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ராதிகாவைத் தான் கோபி திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்கிற விஷயம் கோபியின் அப்பாவான ராமமூர்த்திக்கு ஏற்கனவே தெரிந்து விடுகிறது. ஆனால், ராமமூர்த்தி தாத்தா கோபியை தண்டித்த போது பாக்கியாவை விவாகரத்து செய்துவிடுவேன் என மிரட்டியதால் பாக்கியாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என பயந்து யாரிடமும் கூறாமல் ராமமூர்த்தி தாத்தா அமைதியாக இருந்து வருகிறார்.

Exams Daily Mobile App Download

ஆனாலும், கோபியின் ஆட்டம் ஒழிந்த பாடில்லை. அதையும் சாதகமாக பயன்படுத்தி மேலும் மேலும் ராதிகாவை திருமணம் செய்யத்தான் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். எப்படியாவது பாக்கியாவும் கோபியும் தான் கணவன் மனைவிகள் என்பதை கூறிவிட வேண்டும் என தாத்தா முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாக்கியலட்சுமி சீரியல் முடிவடைய போவதாகவும், விரைவில் பாக்கியலட்சுமி சீரியலின் சீசன் 2 தொடர் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சீசன் 2 தொடரில் பாக்கியாவாக நடிகை நதியா நடிக்கவுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!