திருமண ஏற்பாடுகளை செய்ய துவங்கும் கோபி, ராதிகா ஒப்புக்கொள்வாரா? அதிரடி திருப்பங்கள்!
கோபியிடம் திருமண ஏற்பாடுகளை செய்ய துவங்குமாறு ராதிகாவின் அண்ணன் சந்துரு கூறி விட்டார். ஆனால், ராதிகா திருமணத்திற்கு ஒப்புக்கொள்வாரா என்பது தான் புரியாத புதிராக இருந்து கொண்டிருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை ராதிகாவின் அண்ணன் திருமண ஏற்பாடுகளை செய்யுங்கள் என கூறி விடுகிறார். கடைசி நேரத்தில் ராதிகா சம்மதிக்க போகிறாரா அல்லது பிடிவாதமாக இருந்து கோபியை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என சொல்ல போகிறாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால், கோபியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ராதிகாவிற்கு விருப்பம் இருந்தாலும் கூட ராதிகாவின் உள்ளுணர்வு அதனை செய்ய விடாமல் தடுக்கிறது.
பாக்கியா மீது புகார் கொடுக்கும் கோபி, அதிர்ச்சியில் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!
அதாவது, பாக்கியாவின் வாழ்க்கையையே கெடுத்துவிட்டோமே என ராதிகாவிற்கு அவ்வப்போது தோன்றி கொண்டே இருக்கிறது. ஆனால், ராதிகாவை திருமணத்திற்க்கு சம்மதிக்க வைப்பது என்னுடைய கடமை. நீங்கள் தயங்காமல் திருமண ஏற்பாடுகளை செய்யுங்கள் என கூறிவிடுகிறார். இது புறம் இருக்க மறுபுறம் கோபியை நினைத்து பாக்கியா வீட்டில் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். என்ன தான் கோபியின் மீது கோவம் இருந்தாலும் கோபியை பற்றியே பாக்கியா நினைத்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலைமையில் இனியாவும் சும்மா இருக்காமல் இதுவே அப்பா இருந்திருந்தால் என்னை பள்ளிக்கு காரில் கூட்டி சென்றிருப்பார். தற்போது பஸ்ஸில் செல்லவே கேவலமாக இருக்கிறது என கூறுகிறார். பின்னர், எழில் இனியாவை திட்ட எழிலை ஈஸ்வரி திட்டுகிறார். ஈஸ்வரியின் வேகத்தை பார்த்தால் கோபியின் விருப்பப்படி ராதிகாவிற்கும் கோபிக்கும் திருமணம் செய்துவைத்து விடுவார் போல. ஆனால், ராதிகா திருமணத்திற்கு ஒப்புக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்