விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் ‘இந்த’ கதாபாத்திரத்திற்கு விபத்து – அடுத்து வரப்போகும் திருப்பம்!

0
விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் 'இந்த' கதாபாத்திரத்திற்கு விபத்து - சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!
விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் 'இந்த' கதாபாத்திரத்திற்கு விபத்து - சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!
விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் ‘இந்த’ கதாபாத்திரத்திற்கு விபத்து – சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!

விஜய் டிவியின் வெற்றி தொடர்கள் வரிசையில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அடுத்தடுத்து டிவிஸ்ட்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், கதையின் போக்கை மாற்றக் கூடிய வகையில் ஒரு திருப்பம் வர இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்:

விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றாலே அது டிஆர்பி வரிசையில் நிச்சயம் முன்னணியில் இருக்கும். அந்த வகையில் மாலைநேர தொடராக ஆரம்பித்து தற்போது முன்னணி சீரியல் வரிசையில் பாக்கியலட்சுமி உள்ளது. வழக்கமான கதை தான் என்றாலும், சீரியலில் உள்ள அனைவரின் நடிப்பும் மாஸ் ரகம். இதனால் மக்கள் கவனத்திற்கு வந்து தற்போது வெற்றி அடைந்துள்ளது. ஒரு குடும்பத் தலைவியின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

தமிழ் வீட்டு திருமணத்திற்கு வரும் சரஸ்வதி, உடன் வரும் அருள் – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!

தனது அப்பா, அம்மா, பிள்ளைகளிடம் சரியான முறையில் நடந்து கொள்ளும் கோபி, தனது மனைவியை மட்டும் எது செய்தாலும் திட்டிக் கொண்டே இருப்பார். பல திறமைகளை கொண்டுள்ள பாக்கியலட்சுமி எந்த முயற்சி எடுத்தாலும் வீட்டில் ஒரு போர்க்களம் தான் நடக்கும். இளைய மகனின் ஒத்துழைப்புடன் தனது முயற்சிகளில் பாக்கியா வெற்றி கண்டு வருகிறார். இந்நிலையில் கோபி தனது கல்லூரி காதலி ராதிகாவுடன் குடும்பத்திற்கு தெரியாமல் பழகி வருகிறார். எந்த சூழ்நிலையில் இந்த விஷயம் கோபியின் குடும்பத்திற்கு தெரிய வரும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

குடித்துவிட்டு ஜெனி வீட்டில் பிரச்சனை செய்யும் செழியன், வருத்தப்படும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

கோபி ராதிகாவுடன் கோயிலுக்கு வந்திருப்பதை கோபியின் அப்பா பார்த்து விடுகிறார். இதனால் கோபியை யாருக்கும் தெரியாமல் கண்டிக்கிறார். ஆனால் கோபி ஏதேதோ சொல்லி சமாளித்து விடுகிறார். ராதிகாவிடமும், கோபி யார் என்று கேட்கிறார். ஒரு கட்டத்தில் கோபியை பற்றிய உண்மைகளை ராதிகாவிடம் கூறுவதற்கு கோபியின் அப்பா முயற்சிப்பார். ஆனால் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி இறந்து விடுவது போலவும் காட்சிகள் இனி சீரியலில் வரும் என்று தகவல் வெளிவந்துள்ளது. கோபி தனது குடும்பத்திடம் எப்போது மாட்டுவார் என்று எதிர்பார்த்திருக்கும் ரசிகர்கள், இந்த முறையும் கோபி தப்பித்து விடுவார் போல இருக்கிறதே என்று புலம்பி வருகின்றனர். இதனால் சீரியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் வர இருக்கின்றது என்பது மட்டும் நிச்சயம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!