தீபாவளி விற்பனை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது. பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் தங்கத்தின் விலையால் நகைப்பிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
மக்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா ஊரடங்கால் அனைத்து வியாபாரமும் முடங்கியதாலும் தங்க விலை அதிகரித்தது. சாமானிய மக்கள் வேலை இல்லாத காரணத்தால் சேமிப்பின்றி நகை வாங்குவதை தவிர்த்தனர். அதன் பிறகு கடந்த ஜூன் மாதம் முதல் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது. இதனால் வியாபாரங்களும் நடைபெற தொடங்கியது.
தமிழகத்தில் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நவ.8 நேர்முகத் தேர்வு!
இந்த நிலையில் மக்கள் மீண்டும் வேலைகளுக்கு செல்ல தொடங்கினர். இந்த நேரத்தில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையானது. பொதுவாக பண்டிகை காலங்களிலும், சுபமுகூர்த்த தினங்களில் தங்க விலை அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் தங்கம் விலை ஓரளவு குறைந்தது சாமானிய மக்கள் நகை வாங்க முற்பட்டனர். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.
OLA Electric Scooter முன்பதிவு டிசம்பர் 16 முதல் மீண்டும் துவக்கம் – விலை, சிறப்பம்சங்கள்!
இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,064க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.4,508க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் 20 காசுகள் அதிகரித்து ரூ.68.90க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் நகைப்பிரியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.