கோபி விவாகரத்து செய்யபோவதை அறிந்து கொண்ட பாக்கியா – சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!
எப்படியாவது பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொள்ள கோபி தயாராகி வருகிறார். இந்நிலையில் விவாகரத்து குறித்தான அனைத்து உண்மைகளையும் பாக்யா அறிந்துகொள்ளுமாறு புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. கோபி பல மாதங்களாகவே பாக்கியா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரின் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு ராதிகாவுடன் காதலை வளர்த்து வந்தார். தற்போது பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொள்ள கோபி தயாராகி வருகிறார்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ வினுஷா தேவியை பற்றி வெளியான ஷாக் தகவல் – வியப்பில் ரசிகர்கள்!
பாக்கியாவிடம் அவருக்கு தெரியாமலேயே விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிடுகிறார். தற்போது பாக்கியாவும், கோபியும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றத்தில் இருந்து பாக்யாவின் வீட்டிற்கு நோட்டீஸ் வந்துள்ளது. இதற்கு இடையில் ராதிகாவும் திருமணம் ஆகப்போற மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருக்கிறார். எனக்கு நீ மற்றும் மயூ மட்டும் தான் உலகம் என கோபியும் காதல் மொழிகளை பேசி வருகிறார்.
இந்நிலையில் பாக்கியாவை அழைத்துக்கொண்டு கோபி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அங்கு நீதிமன்றத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதை பார்த்துவிட்டு பாக்கியா ஏன் இவ்வளவு கூட்டம் என வக்கீலிடம் கேட்கிறார். தற்போதெல்லாம் குடும்ப நீதிமன்றத்தில் தான் வழக்குகள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இவர்கள் அனைவருமே விவாகரத்து வாங்க வந்தவர்கள் என அந்த வக்கில் கூறுகிறார். அதற்கு பாக்கியா கோபியை பார்க்க, கோபி என்ன சொல்லி தப்பிப்பது என்று சிந்தித்து கொண்டிருக்கிறார். தற்போது இந்த ப்ரோமோ வெளியாகி மக்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.