கோபியின் விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்திட்ட பாக்கியா – சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி பாக்கியாவை விவாகரத்து செய்ய வக்கீலை சந்திக்கிறார். அவர் விவாகரத்து பத்திரத்தில் உங்க மனைவி கையெழுத்து போட்டால் எல்லாம் சீக்கிரமாக முடிந்துவிடும் என சொல்ல பாக்கியாவை ஏமாற்றி கோபி கையெழுத்து வாங்குவது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
“பாக்கியலட்சுமி” சீரியலில் பல திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. ராதிகாவை கோபி திருமணம் செய்ய முடிவு செய்ததை தொடர்ந்து அந்த விஷயம் தெரிந்த கோபியின் தந்தைக்கு பக்கவாதம் வந்துவிடுகிறது. அதனால் அவரால் பேச முடியாமல் போய்விடுகிறது. இந்நிலையில் கோபி திருத்துவார் என எதிர்பார்த்த நிலையில் ஆனால் திருந்தாமல் ராதிகா வீட்டிற்கு போகிறார். அங்கே ராஜேஷ் தொல்லை செய்வதால் ராதிகா கோபி விரைவில் விவாகரத்து வாங்க வேண்டும் என நினைக்கிறார்.
அப்போது ராதிகாவே வக்கீலை ஏற்பாடு செய்ய அவர் ஒரு நோட்டீஸ் ஒன்றை கொடுத்து அதில் உங்க மனைவி கையெழுத்து போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என சொல்கின்றனர். கோபி பாக்கியாவிடம் கையெழுத்து வாங்க வர கோபி 100 வருஷம் நன்றாக இருக்க வேண்டும் என சொல்லி சுமங்கலி பூஜை நடக்கிறது. அதில் பாக்கியாவின் தாலிக்கு கோபி குங்குமம் வைக்கிறார். அதனால் அவரால் அந்த நேரத்தில் கோபியால் கையெழுத்து வாங்க முடியவில்லை. இந்நிலையில் அடிக்கடி போன் செய்து ராதிகா பத்திரம் பற்றி கேட்கிறார்.
“பாக்கியலட்சுமி” சீரியலில் நீதிமன்றம் வரை சென்ற கோபி, பாக்கியா விவாகரத்து வழக்கு – ப்ரோமோ ரிலீஸ்!
இந்நிலையில் அடுத்த வாரம் யாரும் எதிர்பாராத விதத்தில் ஒரு சம்பவம் நடைபெற இருக்கிறது. அதாவது கோபி பாக்கியாவிடம் விவாகரத்து பத்திரம் என சொல்லாமல் கையெழுத்து கேட்க பாக்கியாவும் அதை படித்து கூட பார்க்காமல் கையெழுத்து போடுகிறார். பாக்கியாவிடம் கோபி படித்து பார்க்கவில்லையா என கேட்க, நீங்க படித்தால் போதும் என பாக்கியா சொல்கிறார். பாக்கியாவின் நம்பிக்கையை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார். இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.