அம்ரிதாவை பற்றி பாக்கியாவிடம் சொல்லப்போகும் எழில் – சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்!
பாக்கியலஷ்மி சீரியலில் எழில் பற்றி அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தான் சமீப நாட்களாக கதை நகர்ந்து வருகிறது. இந்நிலையில் எழில் ஒரு முக்கிய முடிவு எடுக்க போகிறார். இதனால் கதையில் புதிய மாற்றங்கள் வருமா என்பதை பார்க்கலாம்.
எழில் முடிவு:
பாக்யலஷ்மி சீரியலில் எழில் தன் முதல் படத்தை மிகவும் போராடி முடித்து விடுகிறார். ஆனால் பாக்கியா இதற்கு அடைந்த சந்தோசத்தை விட கோபியை எழில் வர கூடாது என்று சொன்னதால் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். இந்நிலையில் அம்ரிதாவை வம்பு இழுபவர்களிடம் சென்று எழில் சண்டை போட்டு வந்தார். இதனால் இது நாள் வரை வெறும் நண்பனாக பார்த்து வந்த அம்ரிதாவிற்கு எழில் மேல் ஒரு வித பாசம் வரத்தொடங்கி இருக்கிறது.
ஒன்றாக ஒரே சீரியலில் நடிக்கும் ஆர்யன், ஷபானா – உற்சாகத்தில் ரசிகர்கள்!
தன் மீது கொண்ட பாசத்தை அம்ரிதா புரிந்து கொள்ள தொடங்கியுள்ளார். இனி அம்ரிதா எழிலை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எழிலுக்கு உதவி இயக்குனராக அவரது தோழி ஒருவர் சேர்ந்துள்ளார். அவரை அம்ரிதாவிற்கு எழில் அறிமுகம் செய்து வைக்கிறார். இதனால் அம்ரிதா சற்று பொஸசிவ் ஆக உணர்கிறார். இதுவே காதலின் முதல் அறிகுறி என்பதால் ரசிகர்கள் இந்த கட்சிகளுக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.
இந்நிலையில் வரும் வாரங்களில் எழில் தூங்கும் போது அம்ரிதாவிற்கு எதோ விபரீதம் நடக்க இருப்பதாக கனவு காண்கிறார்.இதனால் எழில் பயந்து விடுகிறார். இந்நிலையில் அம்ரிதாவிடம் சென்று இனி நீங்க இல்லாமல் என்னால் வாழ முடியாது. உங்கள கல்யாணம் பணிக்கிறது பற்றி என் அம்மாவிடம் பேச இருப்பதாக கூறுவது போல் காட்சிகள் வர உள்ளது.