காதலை சொல்லும் எழில், அதிர்ச்சியில் உறைந்து போன அம்ரிதா – ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ!

0
காதலை சொல்லும் எழில், அதிர்ச்சியில் உறைந்து போன அம்ரிதா - 'பாக்கியலட்சுமி' ப்ரோமோ!
காதலை சொல்லும் எழில், அதிர்ச்சியில் உறைந்து போன அம்ரிதா - 'பாக்கியலட்சுமி' ப்ரோமோ!
காதலை சொல்லும் எழில், அதிர்ச்சியில் உறைந்து போன அம்ரிதா – ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

‘பாக்கியலட்சுமி’ சீரியல்

விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை பிடித்து வருகிறது, பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் தற்போது பல வித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது என்று தான் கூற வேண்டும். கோபி பற்றிய உண்மைகளை அறிந்து கொண்ட அவரது அப்பா ராமமூர்த்தி அவரை முதலில் மிரட்டி பார்க்கிறார். ஆனால், கோபி முதலில் பயந்தாலும் தனக்கு பாக்கியாவை பிடிக்கவில்லை என்றும் நீங்கள் தான் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து விட்டீர்கள் என்றும் கூறி விடுகிறார். இதனால் கோபம் அடையும் அவரது அப்பா ராமமூர்த்தி தனது பெயரில் இருக்கும் சொத்துக்களை தனது பேரன் & பேத்திகள் மற்றும் பாக்கியா பெயரில் எழுதி வைத்து விடுகிறார்.

‘என்னைய ஆள விடுன்னு சொல்ல வைப்பேன்’, கண்ணம்மாவிடம் சவால் விட்ட பாரதி – ப்ரோமோ ரிலீஸ்!

இது ஒரு புறம் இருந்தாலும், அம்ரிதாவிற்கு குழந்தை இருப்பது பற்றி அறியும் எழில் தனது காதலை எப்படியாவது அம்ரிதாவிற்கு புரிய வைக்க வேண்டும் என்று யோசிக்கிறார். இந்நிலையில், லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் அம்ரிதாவின் குழந்தை திடிரென்று மயக்கம் அடைந்து விடுகிறது. அப்போது எழில் அம்ரிதா குடும்பத்தினரிடம் பேசி கொண்டு இருக்கிறார். குழந்தைக்கு எதோ ஆகி விட்டது என்று உணரும் எழில் உடனடியாக இருவரையும் அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு செல்லுகிறார்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு எண்டு கார்டு? அதிர்ந்து போன ரசிகர்கள்!!

அம்ரிதாவின் குழந்தையை பரிசோதித்து விட்டு ஒன்றும் இல்லை என்று கூறி விடுகின்றனர். கூடுதலாக, சரியான நேரத்தில் குழந்தையை அழைத்து வந்ததால் தான் குழந்தையை பரிசோதிக்க முடிந்தது என்றும் கூறுகின்றனர். அப்போது அம்ரிதா எழிலுக்கு நன்றி கூறி விட்டு தன்னால் தனியாக இதனை செய்திருக்க முடியாது என்று கூறுகிறார். காலம் முழுக்க இருவரையும் பாதுகாக்க தான் தயாராக இருப்பதாக எழில் கூறுகிறார். அம்ரிதாவை காதலிப்பதாகவும் கூறுகிறார். இதனை கேட்டு விட்டு அம்ரிதா அதிர்ச்சியில் உறைந்து விடுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!