ராதிகாவுடன் கோபி நெருக்கமாக இருப்பதை பார்த்து ஷாக் ஆன அப்பா – “பாக்கியலட்சுமி” ப்ரோமோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், அடுத்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ராதிகாவுடன் கோபி நெருக்கமாக இருப்பதை அவரது தந்தை பார்த்து விடுகிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில், தற்போது செழியன் ஜெனியை சுற்றி கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஜெனி அம்மா வீட்டிற்கு சென்றதால் செழியன் அவரை பிரிந்து வருத்தத்தில் இருக்கிறார். உடனே பாக்கியாவிடம் சென்று ஜெனியை அழைத்து வர சொல்கிறார். ஆனால் பாக்கியா முடியாது என சொல்ல, செழியன் நானே பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி கிளம்புகிறார். அங்கே சென்றதும் ஜெனியின் அப்பா ஜோசப் சரியான மரியாதை கொடுக்காமல் இருக்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து கண்ணம்மா விலகுவது உண்மையா? ரசிகர்கள் அதிர்ச்சி!
நான் ஜெனியை அழைத்துக் கொண்டு செல்ல வந்திருக்கிறேன் என சொல்ல, ஜோசப் ஜெனியை அனுப்ப மாட்டோம் என சொல்கிறார். இதனால் வருத்தப்பட்ட செழியன் வீட்டிற்கு வர ஈஸ்வரி கோபமாக பேசுகிறார். இந்நிலையில் பாக்கியா கோபியிடன் நாளைக்கு ஜெனியை பார்க்க செல்வோம் என சொல்ல கோபி சரி என சொல்கிறார். அந்த நேரம் பார்த்து ராதிகா போன் செய்து நாளைக்கு புதிய கார் வாங்க போவோம் என சொல்கிறார். கோபி சரி என சொல்ல, இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
ஜெனியை செழியனுடன் அனுப்ப மறுக்கும் ஜோசப்,கோவத்தில் ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
இந்நிலையில் அடுத்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ராதிகாவுடன் கோபி கோவிலுக்கு சென்றிருக்கிறார். அங்கே ராதிகாவுக்கு கோபி பொட்டு வைக்க அந்த நேரம் பார்த்து கோபியின் அப்பா வந்து விடுகிறார். அவர் கோபி மற்றும் ராதிகா நெருக்கமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் கோபி மயூராவை அணைத்து கொண்டு சந்தோசமாக இருக்கிறார். இதை எல்லாம் பார்த்து கோபியின் தந்தை கோபம் கலந்த அதிர்ச்சியில் இருக்கிறார். இதனால் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.