தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அதிகாரபூர்வமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் முதல் கட்டமாக 9 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த மாணவர்களுக்கு தற்போது சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஏற்கனவே அங்கன்வாடி மையங்களில் கொரோனா பரவலால் குழந்தைகளுக்கு உணவுகள் வீடு தேடி கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – அகஸ்தியா 4 நாட்கள் பயிற்சி!
இந்த நிலையில் நவம்பர் 1ஆம் தேதி 1 – 8ம் வகுப்புகளை தொடர்ந்து நர்சரி மற்றும் மழலையர் மற்றும் அங்கன்வாடி மையங்களும் திறக்கப்படும் என்ற தகவல் வெளியானது. காப்பாளர், சமையலர் உள்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். பள்ளிகளில் கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அங்கன்வாடி பணியாளர்கள், நர்சரி பள்ளி ஆசிரியர்கள் என அனனைவரும் பள்ளிகள் திறப்பிற்கு தயாராகி வரும் நேரத்தில் நவம்பர் 1ம் தேதி நர்சரி மற்றும் மழலையர் திறப்பு குறித்து அரசு ஆலோசிக்கவே இல்லை தவறான தகவல் வெளியாகியுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
TNPSC குரூப் 1, 2 & 4 VAO தேர்வு அறிவிப்பு 2021 – அக்.27ம் தேதி தேர்வாணைய குழு கூட்டம்!
அதனை தொடர்ந்து தற்போது நவம்பர் 1ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என்று அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தமிழக அரசு மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என்றும் அரசாணை வெளியிட்டுள்ளது. மழலையர், எல்கேஜி, யுகேஜி பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.