‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து கண்ணம்மா விலகுவது உண்மையா? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி ஹரிபிரியன் சீரியலில் இருந்து விலக இருப்பதாக வெளியான தகவலை அடுத்து, தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல் வரிசையில் ஒன்றான விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சீரியலில் பாரதியாக நடிக்கும் அருண் மற்றும் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி ஹரிபிரியன் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து வருகின்றனர். அவரை ரோஷினி என்று சொல்வதை விட கண்ணம்மா என்ற பெயரில் தான் மக்களிடம் பிரபலமாக இருக்கின்றனர். தற்போது பல்வேறு திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
திருப்பதி தேவஸ்தான சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு – 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது!
இந்நிலையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோஷினி சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தாராம். ஆனால் சேனல் தரப்பில் அவரது மனதை மாற்றி சீரியலில் மீண்டும் நடிக்க வைத்தார்களாம். தற்போது மீண்டும் அவர் சீரியலில் நடிக்க அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் தடை போடுவதால் சீரியலில் இருந்து விலக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
அதுமட்டுமில்லாமல் அவரது குடும்பத்தினர் விரைவில் அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்ய உள்ளனர். அதனால் அவர் நடிக்க வேண்டாம் என சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சேனல் தரப்பில் அவரை தொடர்ந்து நடிக்க வைக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறதாம். மேலும் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனாவிற்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்க இருப்பதால் அவரும் சீரியலில் இருந்து விலகிவிடுவார் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் சீரியல் நிர்வாகம் குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.
Why drag it for years……. Should have been finished long back. We know the end.