எழில் & அம்ரிதாவை சேர்த்து வைக்கும் பாக்கியா – புதிய திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ எபிசோட்!!
விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ள சீரியல் தான் ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியலில் அடுத்த நடக்கவிருக்கும் எபிசோட் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
‘பாக்கியலட்சுமி’ சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. காரணம், இந்த சீரியலில் குடும்ப தலைவியாக இருக்கும் பாக்கியாவிற்கு இருக்கும் ஆசைகள், அவர் சந்தித்து வரும் பிரச்சனை என்று அனைத்தையும் அழகாக எடுத்து காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த சீரியலில் தற்போது பாக்கியவால் செய்யவே முடியாது என்று கூறிய சமையல் ஆர்டரை பாக்கியா வெற்றிகரமாக செய்து முடித்து விடுகிறார்.
ரூ.2.50 லட்சம் தருவதாக சொல்லி இருந்த தொழிலதிபர் பாக்கியாவின் சமையலை ருசித்து விட்டு 3 லட்சமாக தந்து விடுகிறார். இதனால் பாக்கியா மற்றும் அவருடன் வேலை பார்த்த அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க, அம்ரிதா எழிலை காரணமில்லாமல் ஒதுக்குகிறார். அவர் அப்படி பேசுவதால் எழில் மிகவும் சோகத்தில் இருக்கிறார். இருவரது பிரச்சனை பற்றி எழில் தனது அம்மா பாக்கியாவிடம் கூறுகிறார்.
இதனை அறிந்து விட்டு எழில் பற்றி யோசிக்கும் பாக்கியா, எப்படி இருவரது பிரச்சனையையும் தீர்க்கலாம் என்று யோசிக்கிறார். ஏற்கனவே, செழியன் மற்றும் ஜெனியின் பிரச்சனையை தீர்த்து வைத்தது போலவே பாக்கியா எழில் மற்றும் அம்ரிதா இருவரது பிரச்சனையையும் தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எழில் மற்றும் அம்ரிதா இருவரும் முன்பு போலவே நல்ல நண்பர்களாக இருப்பர் என்று நம்பப்படுகிறது.