சிவகாமியிடம் மாட்டிக் கொள்ளும் அர்ச்சனா, கர்ப்பமாக இருப்பதால் மன்னிக்கும் குடும்பத்தினர் – ‘ராஜா ராணி 2’ அடுத்த எபிசோட்!

0
சிவகாமியிடம் மாட்டிக் கொள்ளும் அர்ச்சனா, கர்ப்பமாக இருப்பதால் மன்னிக்கும் குடும்பத்தினர் - 'ராஜா ராணி 2' அடுத்த எபிசோட்!
சிவகாமியிடம் மாட்டிக் கொள்ளும் அர்ச்சனா, கர்ப்பமாக இருப்பதால் மன்னிக்கும் குடும்பத்தினர் - 'ராஜா ராணி 2' அடுத்த எபிசோட்!
சிவகாமியிடம் மாட்டிக் கொள்ளும் அர்ச்சனா, கர்ப்பமாக இருப்பதால் மன்னிக்கும் குடும்பத்தினர் – ‘ராஜா ராணி 2’ அடுத்த எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது காதல் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி 2’ சீரியலில் அர்ச்சனா தான் சந்தியாவை போலீசிடம் மாட்டி விட்டது என்பதனை சிவகாமி மற்றும் குடும்பத்தினர் தெரிந்து கொள்கின்றனர்.

‘ராஜா ராணி 2’ சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒளிபரப்பான ஹிந்தி சீரியலான ‘என் கணவன் என் தோழன்’ ரீமேக் தான் ‘ராஜா ராணி 2’ சீரியல். இந்த சீரியலில் தற்போது சரவணன் மற்றும் சந்தியா இருவரது பிரச்சனைகளும் ஓரளவிற்கு தீர்ந்து விட்டது. ஆனால், பார்வதி தான் ஒரு புது சிக்கலில் மாட்டி இருக்கிறார். பாஸ்கர் மற்றும் விக்கி இருவரும் நண்பர்கள் என்பதை தெரிந்து கொள்கிறார். அதனை சந்தியாவிடமும் கூறுகிறார். இதனை கேட்டு சந்தியா அதிர்ச்சி அடைந்தாலும், சரவணனிடம் இது பற்றி கூற வேண்டாம் என்றும் கூறுகிறார்.

கண்ணனுக்காக மூர்த்தியை எதிர்த்து சண்டை போடும் ஐஸ்வர்யா, கோபத்தில் தனம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!

பார்வதியும் சரி என்றும் கூறி விடுகிறார். பின்னர், அர்ச்சனா பார்வதி திருமணத்தை எப்படி நிறுத்துவது என்று யோசிக்கிறார். அதற்கு எதாவது செய்தால் தான் தனது தங்கையின் வாழ்கை நன்றாக இருக்கும் என்றும் யோசிக்கிறார். இப்படியாக இருக்க, அர்ச்சனா தான் சந்தியாவை போலீசிடம் மாட்டி விட உதவியது என்பதனை வீட்டினர் தெரிந்து கொள்கின்றனர். இதனால் செந்தில் மற்றும் சிவகாமி இருவருக்கும் கோபம் வந்து விடுகிறது. அப்போது கோப மிகுதியில் செந்தில் அர்ச்சனாவை அறைந்து விடுகிறார். அர்ச்சனா அவர் அடித்ததால் அப்படியே மயங்கியும் விழுகிறார்.

கண்ணம்மாவை விவாகரத்து செய்யும் பாரதி, சந்தோச மிகுதியில் வெண்பா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இதனால் அனைவரும் பதட்டமடைந்து அர்ச்சனாவை பரிசோதிக்கின்றனர். அர்ச்சனா கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. ஆனால், அனைவரும் அர்ச்சனா மேல் ஒரு புறம் கோபமாகவும், அதே சமயம் இந்த நேரத்தில் அவரிடம் எப்படி கடுமையாக நடந்து கொள்வது என்றும் யோசிக்கின்றனர். சிவகாமி அனைவரையும் சமாதானம் செய்து அர்ச்சனாவை இந்த சமயத்தில் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். வீட்டினர் அனைவரும் அர்ச்சனா கர்ப்பமான விஷயத்தினை ஸ்வீட் சாப்பிட்டு கொண்டாடுகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!