கண்ணனுக்காக மூர்த்தியை எதிர்த்து சண்டை போடும் ஐஸ்வர்யா, கோபத்தில் தனம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!
விஜய் டிவியில் தற்போது புது வித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரும் எபிசோட்களில் ஐஸ்வர்யா கண்ணனுக்காக அனைவரிடமும் பேசுகிறார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை தக்கவைத்திருக்கும் ஒரு சீரியல் என்றால் அது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தான். தற்போது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்து கொண்டதால் அவரது அம்மா லட்சுமி சோகத்தில் மறைந்து விடுகிறார். இதனால் தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் அவரை ஒதுக்கி வைத்து விடுகின்றனர். இதனால் மனம் உடைந்து போகும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அனைத்து வித சடங்குகளிலும் ஒதுங்கியே இருக்கின்றனர்.
கண்ணம்மாவை விவாகரத்து செய்யும் பாரதி, சந்தோச மிகுதியில் வெண்பா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இப்படியாக இருக்க, லட்சுமி அம்மாக்கு இறுதி காரியங்களை செய்து விட்டு சாமி கும்பிட வீட்டினர் அனைவரும் செல்லுகின்றனர். தனம் மற்றும் மீனாவின் வற்புறுத்தலின் காரணமாக கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் அழைத்து செல்ல மூர்த்தி சம்மதிக்கிறார். ஆனால், கோவிலில் இருவரையும் குடும்பத்தினர் ஒதுக்கியே வைக்கின்றனர். கண்ணனை எந்த வித சடங்கு செய்யவும் விடவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத ஐஸ்வர்யா அனைவரிடமும் சண்டையிடுகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தை எதிர்க்கும் ஐஸ்வர்யா – கண்ணனுக்கு சப்போர்ட்! ரசிகர்கள் அதிர்ச்சி!
தங்களை பிடிக்கவில்லை என்றால், எதற்காக கோவிலுக்கு அழைத்து வர வேண்டும் என்று சண்டையிடுகிறார். ஐஸ்வர்யா அனைவரின் முன்பும் மூர்த்தியிடம் சண்டையிடுவதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். ஐஸ்வர்யா இப்படி கேட்டதால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் மேலும் சண்டை தான் பெருசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.