‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தை எதிர்க்கும் ஐஸ்வர்யா – கண்ணனுக்கு சப்போர்ட்! ரசிகர்கள் அதிர்ச்சி!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கண்ணனை வீட்டினர் அனைவரும் ஒதுக்கி வைக்கின்றனர். இதனை பார்த்து ஐஸ்வர்யா கண்ணனுக்காக அனைவரிடமும் சண்டையிடுகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குடும்ப கதை களத்தை கொண்டு நகரும் இந்த சீரியலில் அனைவரது கேரக்டர்களும் ரசிக்கும் படி உள்ளது. தற்போது மூர்த்தியின் அம்மா லட்சுமி இறந்து விட்டார். ஆனால் கடைசி நிலையிலும் அவரது கடைசி மகன் கண்ணன் அம்மாவை பார்க்கவில்லை. அம்மா இறந்ததற்கு காரணம் கண்ணன் தான் என்று அனைவரும் கூற குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறார் கண்ணன் அம்மா இறந்து விட்டார். இனி கண்ணன் குடும்பத்துடன் இணைத்து விடுவாரா என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
வழிபாட்டு தலங்களில் 50% பார்வையாளர்கள் அனுமதி – மாநில அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் அத்தாச்சியின் பேச்சை கேட்டு மனம் மாறி கண்ணன் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு கண்ணனை யாரும் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து அவமானங்களை சந்திக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே கோயிலுக்கு வர மீனாவின் அப்பா கண்னனை வழக்கம் போல் திட்டுகிறார். கஸ்தூரி அத்தாச்சியும் திட்டுவது போல் நடிக்கிறார்.
தமிழக தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் – சுற்றறிக்கை வெளியீடு!
கண்ணனும் ஐஸ்வர்யாவும் குடும்பத்தையே பார்த்து கொண்டு கோயிலின் ஓரமாக போய் நிற்கிறார்கள். லட்சுமி அம்மா படத்திற்கு அனைத்து மகன்களும் மாலையிட கண்ணன் அவமானப்படுத்தப்படுகிறான். அதன் பிறகு விளக்கு ஏற்றும் இடத்திலும் அவமானப்படுகிறார். இதை பார்த்து கொந்தளித்த ஐஸ்வர்யா கோபத்தில் மூர்த்தி தனத்திடம் போய் கேள்வி கேட்கிறார்.
ஐஸ்வர்யா கேட்பதில் தவறொன்றுமில்லை இதுவே மீனா ஜீவா கல்யாணத்தை ஏற்றுக்கொண்ட மீனாட்சி அம்மாள் கண்ணனின் திருமணத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கலாம் அல்லது நான் உயிரோடு இருக்கும்போதே கண்ணனை ஏற்றுக்கொள்ள அனுமதித்து இருக்கலாம் மீனாட்சி அம்மாள் தனத்திடம் சொன்னதற்கு பதிலாக மூர்த்தி இடமே சொல்லி இருக்கலாம்