சமையல் ஆர்டர் செய்ய அட்வான்ஸ் வாங்கும் பாக்கியா, கோபத்தின் உச்சியில் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பெரிய ஆர்டர் வழங்கிய தொழிலதிபர் பாக்கியாவிற்கு சமையல் செய்ய அட்வான்ஸ் கொடுக்கிறார். அதை தெரிந்து கொண்ட கோபி பயங்கரமாக திட்டுகிறார். பின் எழில் என்ன பிரச்சனை வந்தாலும் நான் உன்னுடன் இருப்பேன் என தைரியம் சொல்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிற்கு சமையல் ஆர்டர் கொடுத்த தொழிலதிபர், பாக்கியாவிடம் அட்வான்ஸ் எதுவும் வேண்டுமா என கேட்கிறார். ஆனால் பாக்கியா சமைத்து முடித்துவிட்டு தான் சொல்ல முடியும் என சொல்கிறார். உடனே அந்த தொழிலதிபர், நன்றாக சமைக்க வேண்டும் என நினைக்கிறீங்க இதை பிசினஸாக பார்க்கவில்லை என சொல்லி அட்வான்ஸ் செக் கொடுக்கிறார். பாக்கியா அதை வாங்கி கொண்டு வீட்டிற்கு செல்கிறார். அதை பார்த்து கோபி என்ன என்று கேட்கிறார்.
உனக்கு எதாவது காசு வேண்டுமா ஏன் செக்கை கையில் வைத்திருக்க என கேட்கிறார். உடனே பாக்கியா அட்வான்ஸ் கொடுத்தது என சொல்ல, அப்போ அந்த சமையல் ஆர்டரை செய்ய போறியா என கேள்வி கேட்கிறார். ஆமாம் என பாக்கியா சொல்ல, கண்டபடி பாக்கியாவை கோபி திட்டுகிறார். எழில் அவருக்கு ஆதரவாக பேச, அவரையும் கோபத்துடன் தடுத்து நிறுத்துகிறார். கோபி இது பெரிய ஆர்டர் இதை செய்யவே முடியாது என சொல்கிறார்.
என் நண்பன் போல சமையல் நன்றாக இல்லாவிட்டாலும் சும்மா இருக்கமாட்டாங்க என சொல்கிறார். இது பெரிய நிறுவனம் சமையல் சரியான நேரத்தில் கொடுக்காமல் இருந்தால் பெரிய பிரச்சனை ஆகும். பிரச்சனை நடந்தால் நான் உன்னுடன் இருக்கமாட்டேன் என சொல்லி திட்டுகிறார். உடனே பாக்கியா சோகமாக இருக்க, எழில் வந்து என்ன பிரச்சனை நடந்தாலும் நான் உங்களுடன் இருப்பேன் என சொல்கிறார். பாக்கியாவை தைரியமாக இருக்க சொல்ல, அப்போது தான் பாக்கியாவிற்கு நிம்மதியாக இருக்கிறது.
பின் பாக்கியா சமைக்க தேவையான ஆட்களை திரட்டுகிறார். அவர்களை வீட்டிற்கு வர சொல்லி எப்படி சமைக்க போகிறோம் என்பதை விளக்குகிறார். ஒரு சிலர் முடியாது என குறைகளை சொல்ல, நாங்க பாத்திரமும் மளிகை பொருள்களும் தருகிறோம் என சொல்ல அனைவரும் யோசனையில் இருக்கின்றனர். அப்போது கோபி அங்கே வர கூட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
ஹேமா கண்ணம்மாவின் குழந்தை என்ற உண்மையை தெரிந்து கொண்ட அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
அவர் வீட்டிற்குள் சென்று என்ன நடக்குது என கேட்க, கோபி கோவத்தின் உச்சியில் இருக்கிறார். இது வீடா இல்லை சந்தையா என கோபி கேட்க, யாருக்கெல்லாம் இதற்கு சம்மதம் என கேட்கிறார் பாக்கியா, பலர் எங்களால் முடியாது என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். உடனே பாக்கியாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் வருத்தமாக இருக்கிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.