கண்ணனிற்கு சாப்பாடு கொடுக்கும் தனம், கனவில் வரும் லட்சுமி அம்மா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
கண்ணனிற்கு சாப்பாடு கொடுக்கும் தனம், கனவில் வரும் லட்சுமி அம்மா - இன்றைய
கண்ணனிற்கு சாப்பாடு கொடுக்கும் தனம், கனவில் வரும் லட்சுமி அம்மா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
கண்ணனிற்கு சாப்பாடு கொடுக்கும் தனம், கனவில் வரும் லட்சுமி அம்மா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் சாப்பிடாமல் இருக்க தனம் சாப்பாடு கொடுத்துவிடுகிறார். பின் தனமும் மூர்த்தியும் அம்மாவை நினைத்து கவலைப்படுகின்றனர். நம்ம தம்பிகளை நம்ம தான் பார்த்துக் கொள்ள வேண்டும் தனம் என சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடும்பத்தில் இருப்பவர்கள் அம்மா இல்லாமல் இனிமேல் எப்படி இருக்க போறோம் என நினைத்து வருத்தத்துடன் இருக்க, முல்லையின் அம்மா அப்பா ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். பின் தனம் உள்ளே சென்று பார்க்க சாப்பாடு எல்லாம் அப்படியே இருக்கிறது. உடனே வேலை செய்யும் பையனை அழைத்து சாப்பாடு எடுத்து கொண்டுபோய் கண்ணனிற்கு கொடுக்க சொல்கிறார். மறுபக்கம் கண்ணன் ஐஸ்வர்யாவிடம் சாப்பிட உக்காரும் போது அண்ணன் எழுந்தது வருத்தமாக இருக்கிறது என சொல்கிறார்.

அப்போது ஐஸ்வர்யா அத்தை இறந்ததற்கு நாம தான் காரணம் என சொல்வது தான் வருத்தமாக இருக்கிறது. எல்லாம் ஒரு நாள் மாறிவிடும் என சொல்கிறார். அப்போது வேலை செய்யும் பையன் வந்து சாப்பாடு கொடுக்க, கண்ணன் சாப்பாடு சாப்பிடுகிறார். நான் சொன்னேன்ல எல்லாம் ஒரு நாள் மாறும் என ஐஸ்வர்யா சொல்கிறார். தனம் அண்ணிக்கு என் மேலே பாசம் அதிகம், அவர் எனக்கு அண்ணி மட்டுமல்ல எனக்கு அம்மா கூட என சொல்லி வருத்தப்படுகிறார்.

ஹேமா கண்ணம்மாவின் குழந்தை என்ற உண்மையை தெரிந்து கொண்ட அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

மூர்த்தியும் தனமும் அமர்ந்திருக்க, அம்மா இப்படி நம்ம குழந்தையை பார்க்காமல் சென்றுவிட்டார்கள் என வருத்தப்படுகின்றனர். நம்மளை விட நம்ம குழந்தையை பார்க்க அம்மா தான் ஆசையாக இருந்தார்கள் என மூர்த்தி சொல்கிறார். பின் தம்பிகளை இப்படியே விட்டுவிட கூடாது. அம்மா பிரிந்த சோகம் இல்லாமல் வளர்க்க வேண்டும் என மூர்த்தி சொல்கிறார். கண்ணன் அருகில் சாப்பிட உட்கார நான் எழுந்துவிட்டேன் என என் மீது கோவமா என மூர்த்தி கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை என தனம் சொல்கிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் கலந்து கொள்ளும் ஜிபி முத்து? அவரே சொன்ன தகவல்!

என்னால் அவன் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என மூர்த்தி சொல்லிவிட்டு தூங்க செல்கிறார். தனம் தூங்கும் போது அவருக்கு கனவு வருகிறது. அதில் லட்சுமி அம்மா வருகிறார். ஏன் எல்லாரும் அழுறாங்க நான் உன்னிடம் சொல்லிவிட்டு தான போனேன் ஆனால் எல்லாரையும் இப்படி அழ விட்டிருக்க என கேட்கிறார். நீங்க இப்படி எங்களை விட்டு போகலாமா என தனம் கேட்க, நான் எங்கேயும் போகவில்லை இங்கே தான் இருக்கிறேன் என லட்சுமி அம்மா சொல்கிறார்.

உனக்கு குழந்தை பிறக்க போகுது அதை பார்க்காமல் நான் எங்கே போவேன் என சொல்ல, நீ முதலில் தைரியமாக இருந்தால் தான் இவர்களை பார்த்துக் கொள்ள முடியும் என லட்சுமி அம்மா சொல்கிறார். மூர்த்தி இப்படி ஒடஞ்சு போய் இருக்கிறான். கதிர் ஜீவா குழந்தை போல அழுது கொண்டு இருக்கிறார்கள். நீ தான் அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். உடனே தூங்கி கொண்டிருந்த தனம் பதறி போய் எழுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!