ஹேமா கண்ணம்மாவின் குழந்தை என்ற உண்மையை தெரிந்து கொண்ட அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், அஞ்சலி சௌந்தர்யாவிடம் கண்ணம்மா இரட்டை குழந்தைகள் பற்றி கேட்டாள் உண்மையாகவே ஹேமா தத்து எடுத்த குழந்தை தானா என கேள்வி கேட்கிறார். உடனே அஞ்சலியிடம் சௌந்தர்யா உண்மையை சொல்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், அஞ்சலி சௌந்தர்யாவிடம் தயக்கத்துடன் எதோ கேட்பது போல வந்து உட்காருகிறார். சௌந்தர்யா என்ன தயக்கத்துடன் இருக்க என சௌந்தர்யா கேட்க, உடனே அஞ்சலி கண்ணம்மா எனக்கு போன் செய்தார் எனக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. ஆனால் ஒரு குழந்தை எங்கே என தெரியவில்லை. உண்மையாகவே ஹேமா யாரு என தெரியுமா என கேட்டார் என சொல்கிறார். உண்மையாவே ஹேமா யாரு என அஞ்சலி சௌந்தர்யாவிடம் கேட்ட, சௌந்தர்யா உண்மையை சொல்கிறார்.
8 வருடங்களுக்கு முன் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது அதை அப்படியே விட்டு வர எனக்கு மனம் வரவில்லை. இந்த குழந்தை மூலமாக தான் கண்ணம்மாவும் பாரதியும் சேர்த்து வைக்கலாம் என தோன்றியது அதனால் தான் இப்படி செய்தேன் என சொல்கிறார். உடனே அஞ்சலி சௌந்தர்யாவை புரிந்து கொண்டு நீங்க செய்ததும் சரி தான் நீங்க அவளை பிரித்து எங்கேயோ கொண்டு செல்லவில்லை அவளுடைய சொந்த அப்பாவிடம் தான வளர்க்கிறார்.
தளபதி 66 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் – ரசிகர்கள் உற்சாகம்! ட்விட்டர் ட்ரெண்டிங்!
பாரதியும் ஹேமா மீது பாசத்தை கொட்டுகிறார் என சொல்கிறார். அப்போது தான் சௌந்தர்யாவிற்கு குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறது. உடனே ஹேமா அங்கே வந்து சௌந்தர்யாவிடம் எதோ கேட்க, அஞ்சலி அவளை பாசத்துடன் அழைத்து முத்தமிட்டு கொஞ்சுகிறார். என்னாச்சு சித்தி திடீரென பாசமாக இருக்கீங்க என ஹேமா கேட்க இன்னைக்கு நீ எனக்கு புதுசா தெரிகிறாய் என சொல்லி அஞ்சலி ஹேமாவை கொஞ்சுகிறார். உடனே சௌந்தர்யா அதை பார்த்து ரசிக்கிறார்.
பின் அகில் சௌந்தர்யா வேணு பேசிக் கொண்டிருக்கிறனர். இப்போதே ரொம்ப வருடம் ஆகிவிட்டது. பாரதி கண்ணம்மாவை சேர்க்க ஏதாவது செய்ய வேண்டும் என அகில் சொல்கிறார். சீக்கிரமாக அது எல்லாம் நடக்கும் இருவரும் ஒரு காலத்தில் சந்தோசமாக வாழ்ந்தவர்கள் தான அது எல்லாத்தையும் மறந்திருப்பாங்களா என்ன என சௌந்தர்யா சொல்ல, இதெல்லாம் நினைத்தால் எனக்கு நெஞ்சு வலிப்பது போல இருக்கிறது என சொல்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லைக்கு விரைவில் திருமணம்? மணக்கோலத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்!
உடனே சௌந்தர்யா அதெல்லாம் எதுவும் நடக்காது, நீங்க இப்போல்லாம் காலையில் யோகா செய்வது இல்லை என சொல்லி அவரை தூங்க செல்ல சொல்கிறார். மறுபக்கம் அகில் அமர்ந்திருக்க அஞ்சலி வருகிறார். ஏன் என்னிடம் சில உண்மைகளை சொல்லவில்லை என கேட்க எதை பற்றி கேட்கிறாய் என தெரியாமல் அகில் இருக்கிறார். ஹேமா பற்றிய உண்மை தான் என அகில் சொல்ல இதெல்லாம் 9 வருடங்களுக்கு முன் நடந்தது.
அப்போது நீயும் இப்படி இல்லை நானும் இப்படி இல்லை அதனால் இது ரகசியமாக இருக்கட்டும் என முடிவு செய்தோம் என சொல்கிறார். இப்பவும் நானா அத்தையிடம் கேட்காமல் இருந்தால் நீ சொல்லிருக்க மாட்டா என அஞ்சலி சொல்கிறார். உடனே அங்கே ஹேமா வர அஞ்சலி பாசத்துடன் ஹேமாவிற்கு பரிசு கொடுக்கிறார். ஹேமா சித்தி என கூப்பிட, அஞ்சலி அம்மா என கூப்பிட சொல்கிறார். அகிலை அப்பா என கூப்பிட சொல்கிறார். ஹேமா அஞ்சலியை அம்மா என கூப்பிட சந்தோசமாக இருக்கிறது.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.