பண கஷ்டத்தில் இருக்கும் கோபி, சமையல் ஆர்டர் செய்ய முடிவு எடுக்கும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி கோபிக்கு படித்த பெண்ணை கல்யாணம் செய்யவில்லை என பாக்கியாவிடம் குறை சொல்கிறார். கம்பெனியில் பணம் இல்லை என கோபியிடம் சுரேஷ் சொல்கிறார். பின் பாக்கியா இந்த சமையல் ஆர்டரை செய்ய ஒத்துக்கொள்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியின் அம்மா நல்ல படித்த பெண்ணை திருமணம் செய்து வைத்திருந்தால் கோபிக்கு நல்ல உதவியாக இருப்பாள் என சொல்லி குறை சொல்கிறார். உடனே செல்வி உன் மாமியார்க்கு படித்த பெண்ணை திருமணம் செய்திருந்தால் தெரியும், எல்லா வேலையும் அவங்க தான் பார்த்திருப்பாங்க என சொல்கிறார். அவங்க பேச்சை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டால் எதுவும் செய்ய முடியாது என பாக்கியா சொல்கிறார்.
கோபி அலுவலகத்தில் வேலை செய்யும் சுரேஷ்யிடம் அலுவலகத்தில் உள்ள காசு அனைத்தையும் என் அக்கவுண்டிற்கு அனுப்பு என சொல்கிறார். உடனே சுரேஷ் அலுவலகத்தில் குறைவான காசு தான் இருக்கிறது எல்லாத்தையும் அனுப்பிவிட்டால் அப்பறம் தினமும் சிரமமாகிவிடும் என சொல்கிறார். உடனே கோபி இப்படியே சென்றால் சரியாக வாராது என கோபி நினைத்து பார்க்கிறார். பின் பாக்கியா சாப்பாடு கொண்டு செல்ல கிளம்புகிறார்.
மூர்த்தியிடம் சண்டை போடும் கண்ணன், கோவத்தில் பேசும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
அந்த நேரம் பார்த்து கோபி அங்கே வருகிறார். இப்படியே சாப்பாடு சமைத்து கொடுத்து வீட்டில் இருக்கும் காசை வீண் செலவு செய்கிறாய். சாப்பாடு கொடுத்து காசு எதுவும் வாங்கவில்லை என சொல்கிறார். உடனே பாக்கியா நான் தான் மளிகை பொருள்கள் வாங்குறேன் என சொல்ல, அப்போ நான் சம்பாரிக்கவில்லை என சொல்கிறார். நானே காசு இல்லாமல் இருக்கேன் என கோபி சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். பாக்கியா சாப்பாடு கொடுக்க வந்த இடத்தில் சமைக்க முடியுமா என கேட்கிறார்.
பாக்கியா கோபி சொன்னதை நினைத்து அதெல்லாம் செய்திருவேன் என சொல்கிறார். வெளியே வந்ததும் செல்வி என்ன சம்மதம் சொல்லிட்ட என கேட்க, அவர் நான் சம்பாரிக்கவில்லை என எப்படி சொல்கிறார் பாரு அதை நினைத்து தான் நான் எப்படியாவது சமைத்து சம்பாரிக்க போகிறேன் என சொல்கிறார். அதற்கு உன் வீட்டில் இருப்பவர்கள் சம்மதம் தெரிவிக்கவேண்டும் என செல்வி சொல்ல அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். நீ எப்படி தான் இத்தனை வருஷம் இந்த வீட்டில் இருக்க என செல்வி கேட்க அதெல்லாம் ஞாபகப்படுத்தாத என பாக்கியா சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.