மூர்த்தியிடம் சண்டை போடும் கண்ணன், கோவத்தில் பேசும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
மூர்த்தியிடம் சண்டை போடும் கண்ணன், கோவத்தில் பேசும் தனம் - இன்றைய
மூர்த்தியிடம் சண்டை போடும் கண்ணன், கோவத்தில் பேசும் தனம் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
மூர்த்தியிடம் சண்டை போடும் கண்ணன், கோவத்தில் பேசும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், அம்மா முகத்தை காட்டாமல் அண்ணன்கள் அம்மாவை அடக்கம் செய்ததால் கோவத்தில் இருக்கும் கண்ணன் மூர்த்தியிடம் கேள்வி கேட்கிறார். பின் தனம் நீ செய்த தவறால் தான் அம்மாவிற்கு இப்படி ஆகிவிட்டது என சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனை கடைசியாக அம்மா முகத்தை பார்க்க முடியவில்லை அழுது கொண்டிருக்க, அந்த வீட்டில் யாரும் உன்னை நினைத்து பார்க்கவில்லை என ஐஸ்வர்யா அவரிடம் சொல்கிறார். உடனே கோவப்பட்ட கண்ணன், நியாயம் கேட்க வேண்டும் என அண்ணன் வீட்டிற்கு செல்கிறார். அங்கே வாசலில் நின்று அழ தனம் கண்ணன் குரல் கேட்கிறது என சொல்கிறார். உடனே உள்ளே வந்த கண்ணன் மூர்த்தியை பார்த்து கேள்வி கேட்கிறார்.

என் அம்மா முகத்தை பார்க்கவிடாமல் செய்ய நீங்க யாரு என கேள்வி கேட்கிறார். கடைசி வரை என் அம்மாவை நான் பார்க்கவில்லை. மருத்துவமனையில் என்னை ஒருதடவை பார்க்கவிட்டிருக்கலாம் என சொல்லி அழுகிறார். அதன் பின்னர் எல்லாரும் செய்யாத தப்பா நான் செய்திருக்கேன். என்னை ஏன் இப்படி அம்மாவை கூட பார்க்கவிடாமல் இப்படி செய்தீர்கள் என கேட்கிறார். என் மீது கோவம் இருந்தால் என்னிடம் பேசாமல் இருங்க என்னை வீட்டிற்குள் கூட சேர்க்காமல் இருங்க ஆனால் என் அம்மாவை பார்க்க விடாமல் செய்ய நீங்க யாரு என கேட்கிறார்.

கண்ணம்மாவுடம் சேர்ந்து வாழ விரும்பும் பாரதி, தடுக்க நினைக்கும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

உடனே தனம் கோவப்பட்டு, இதுவரை உன்னை நான் எதுவும் சொல்லவில்லை. அன்னைக்கு வீட்டு வாசலில் நிற்கும் போது கூட எதுவும் சொல்லவில்லை. ஆனால் இப்போ சொல்கிறேன். அம்மாவை காட்டவில்லை என இவ்வளவு கோவப்படுகிறாய், ஆனால் அவர் இந்த நிலைமைக்கு ஆளானதற்கு காரணமே நீ தான் என சொல்கிறார். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் உன்னை பற்றி நினைக்க வேண்டும் ஆனால் நீ யாரை பற்றியும் நினைக்காமல் இப்படி செய்ததற்கு தான் நாங்க எல்லாரும் தண்டனை அனுபவிக்கிறோம் என சொல்கிறார்.

இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு குழந்தை பிறந்துவிடும், அதை பார்க்க கூட செய்யாமல் அத்தை உன்னால் தான் இப்படி ஆயிட்டாங்க நாங்க இனிமேல் எப்படி அவங்களை பாப்போம் என சொல்லி அழுகிறார். இந்த வீட்டில் தான இருந்த, இந்த வீட்டில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கூட தெரியாமல் எப்படி இப்படி பேச உனக்கு மனம் வந்தது என சொல்கிறார். உடனே அதை கேட்டு கண்ணன் கதறி அழுகிறார். நீ உன் அம்மாவை பார்க்க வராமல் எங்கேயோ போய்விட்டாய் எவ்வளவு நேரம் காத்திருந்தோம் என உனக்கு என்ன தெரியும்.

‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகையின் நிஜ மகள் – இன்ஸ்டா வீடியோ வைரல்!

ஊர் மக்கள் எல்லாரும் சொன்ன பின்னாடி தான் எல்லாம் செய்தோம் என சொல்லி அழுகிறார்.மீனா முல்லை தனத்தை உள்ளே போக சொல்கின்றனர். கண்ணன் அழுது கொண்டே அவரது வீட்டிற்கு செல்கிறார். அம்மா என்னை இப்படி விட்டு போய்ட்டியே இனிமேல் உன்னை எப்படி நான் பார்ப்பேன். நானே உன்னை கொன்றுவிட்டேன் என சொல்லி கதறி அழுகிறார். பதிலுக்கு ஐஸ்வர்யாவும் அழுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!