முதல் சுற்றில் வெற்றி பெற்ற பாக்கியா, சிறப்பு விருந்தினராக வரும் நடிகை ரேகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஸ்கூலில் நண்பர்கள் அம்மாக்கள் திறமையை பார்த்து இனியா இங்கிருந்து கிளம்பிருவோம் என சொல்கிறார். பாக்கியா அடுப்பில்லாமல் சமைக்கும் உணவுகளை சமைத்து காண்பிக்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில்,அன்னையர் தின நிகழ்ச்சியில் பாக்கியா சமைத்து வைத்திருக்கிறார். அப்போது இனியா மற்ற நண்பர்கள் அம்மா செய்ததை பார்த்து பயத்தில் இருக்கிறார். அவர்கள் எல்லாம் புதுவிதமாக செய்து வைத்திருக்க நீ மட்டும் என்ன இப்படி செய்கிறாய் என சொல்கிறார். பேசாமல் நாம் இங்கிருந்து கிளம்பிருவோமா என சொல்ல, நடுவர்கள் பாக்கியாவிடம் வருகின்றனர். அப்போது பாக்கியா சமைத்து வைத்திருப்பதை காட்டுகிறார்.
இது என்ன என்று நடுவர்கள் கேட்க அடுப்பில்லாமல் சமைப்பது இவ்வாறு சமைத்தால் எங்கே சென்றாலும் சாப்பிடலாம் இது மிகவும் சத்தானது கூட என சொல்கிறார். உடனே நடுவர் அங்கிருந்து கிளம்ப, இனியாவின் நண்பர்கள் உன் அம்மாவிற்கு எதுவும் செய்ய தெரியாதா என கேட்கின்றனர். இனியா கோபத்துடன் இருக்க நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்கின்றனர். அப்போது சிறப்பு நடுவரை அழைக்கின்றனர். அப்போது அங்கே ரேகா வருகிறார்.
அவரை பார்த்ததும் பாக்கியா சந்தோசப்படுகிறார். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என பாக்கியா சொல்கிறார். முதல் சுற்றில் வெற்றி பெற்றவர்கள் பெயர்களை வாசிக்கின்றனர். அப்போது இனியா நம்ம பெயர் வராது வா கிளம்புவோம் என சொல்ல, பாக்கியா இரு என சொல்கிறார். இறுதியாக பாக்கியாவின் பெயரை அழைக்கின்றனர். ஒவ்வொரு அம்மாவும் தனது திறமைகளை காட்ட இனியா தனது அம்மா என்ன செய்ய போகிறார் என நினைத்து வருத்தத்தில் உள்ளார். இப்போது பாக்கியா வர, கூட்டத்தை பார்த்து பயத்தில் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.