பண மோசடி கும்பலிடம் சிக்கும் பாக்கியா, பணம் கேட்டு வந்து நிற்கும் பெண்கள் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவை பேங்கில் இருந்து கூப்பிடுவதாக சொல்லி ஏடிஎம் கார்டு நம்பர் வாங்கி ஏமாற்றுகிறார். மறுபக்கம் கோபி அலுவலகத்தில் பணம் இல்லை என சொல்லி வேலையை விட்டு சிலர் சென்றுவிட்டதாக சொல்கின்றனர்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவும் செல்வியும் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க, பாக்கியாவிற்கு போன் வருகிறது. அப்போது அவரிடம் பேங்கில் இருந்து பேசுவதாக சொல்லி, ஏடிஎம் கார்டு நம்பர் வாங்குகிறார். பின் வீட்டில் ஓடிபி வந்ததை சொல்ல சொல்கிறார். அப்போது பாக்கியா ஓடிபியை சொல்கிறார். அதன் பின் கோபி அலுவலகத்தில் மேனேஜர் வந்து அலுவலகம் நஷ்டத்தில் ஓடுகிறது என சொல்கிறார். ஏற்கனவே இரண்டு பேர் வேலைவிட்டு போய்விட்டார்கள் என சொல்கிறார்.
உடனே கோவப்பட்ட கோபி என் வீட்டு லோனை என் காசில் இருந்து தான் செலுத்துகிறேன். நீங்க சரியாக வேலை செய்தால் தான் காசு வரும் என சொல்கிறார். பின் வீட்டு செலவிற்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். மறுபக்கம் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஜெனிக்கு என்ன குழந்தை வேண்டும் என கேட்கின்றனர். எனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என சொல்ல செழியன் என்ன குழந்தை வேண்டும் என கேட்கிறார். அப்போது ஜெனி முகம் சின்னதாக மாறிவிட்டது.
சௌந்தர்யாவிடம் பாரதி பிரசவம் பார்த்ததை சொன்ன கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
பின் பாக்கியா பேங்க் செல்ல, அவருடன் எழில் செல்கிறார். மேலும் பாக்கியா பெரிய பையை எடுத்துக் கொண்டு செல்கிறார். அனைவரும் காசு கேட்டு வருவார்கள் அவர்களிடம் காத்திருக்க சொல்லுங்க நான் பணத்துடன் வந்துவிடுகிறேன் என சொல்லி கிளம்புகிறார். பின் அனைவரும் காசு வாங்க வந்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பாக்கியா பேங்க் வந்து காசு எடுக்க சலான் எழுதி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
This concept is very poor concept the people’s are very allotted for this world for improve our technology ; knowledge