தனத்திடம் கண்ணனிற்காக கேள்வி கேட்கும் ஐஸ்வர்யா, குழப்பம் செய்யும் கஸ்தூரி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
தனத்திடம் கண்ணனிற்காக கேள்வி கேட்கும் ஐஸ்வர்யா, குழப்பம் செய்யும் கஸ்தூரி - இன்றைய
தனத்திடம் கண்ணனிற்காக கேள்வி கேட்கும் ஐஸ்வர்யா, குழப்பம் செய்யும் கஸ்தூரி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
தனத்திடம் கண்ணனிற்காக கேள்வி கேட்கும் ஐஸ்வர்யா, குழப்பம் செய்யும் கஸ்தூரி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கஸ்தூரி லட்சுமி அம்மா இறந்ததற்கு கண்ணன் தான் காரணம் என சொல்ல, ஐஸ்வர்யா உடனே கோவப்பட்டு கண்ணனிற்கு அந்த வீட்டில் உரிமை இருக்கிறதா என கேள்வி கேட்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குலதெய்வ கோவிலில் அனைத்து சடங்குகளையும் செய்துவிட்டு, இனி அம்மாக்கு எல்லாம் முடிந்துவிட்டது. கோவிலுக்கு செல்லலாம் எல்லாம் பண்ணலாம் என சொல்கிறார். அப்போது கண்ணன் அம்மாவை நினைத்து அழ, கஸ்தூரி கண்ணனை திட்டுகிறார். உன்னால் தான் நல்ல இருந்த அம்மா இறந்துவிட்டார். அதை நினைத்து தான் அழுகிறாய் என சொல்ல, உடனே ஐஸ்வர்யாவிற்கு கோவம் வருகிறது.

உடனே ஐஸ்வர்யா தனம் அருகே செல்ல, ஜெகா எதற்கு தனம் அருகே நிற்கிறாய் என கேட்கிறார். ஆனால் ஐஸ்வர்யா எல்லாரும் கண்ணனை அவமானப்படுத்த நீங்க பார்த்துக் கொண்டு இருக்கீங்க என கேட்கிறார். பின் அவரும் இந்த வீட்டு பையன் தானா, ஏன் எல்லாரும் அவனை மதிக்காமல் இருக்கீங்க என கேட்கிறார். ஆமாம் நாங்க தப்பு செய்தோம் எங்களுக்கு அதற்கு காரணம் இருக்கிறது. அதற்காக என்னவேனாலும் எங்களை செய்வீர்களா, சாப்பிட அருகில் அமர்ந்தால் எந்திரிக்கிறீர்கள், வந்த இடத்தில் அவமானப்படுத்துறீங்க என்ன நினைத்துக் கொண்டு இருக்கீங்க என கேட்கிறார்.

சௌந்தர்யாவிடம் பாரதி பிரசவம் பார்த்ததை சொன்ன கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

இந்த வீட்டில் கண்ணனிற்கு உரிமை இருக்கா இல்லையா என கேட்க, உடனே கோவப்பட்ட தனம் வீட்டு சாவியை குடுத்து போக சொல்கிறார். வீட்டு பூட்டி தான் இருக்கு நீங்க சென்று இருங்க என சொல்ல, ஐஸ்வர்யா என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்கிறார். பின் கண்ணன் ஐஸ்வர்யா அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என சொல்லி வருத்தப்பட்டு அழுகிறார். பின் அவர்கள் அங்கிருந்து கிளம்ப, தனம் அம்மா நீ இப்படி எல்லாம் எடுத்துக் கொடுக்கிறாய் என கேட்கிறார்.

நீ கல்யாணம் முடிந்து வந்து தான் இந்த வீட்டை காப்பாற்றினாய், நாங்க போட்ட நகை எதாவது இருக்கிறதா என கேட்க, உடனே தனம் இந்த வீட்டை உன் பேரில் மாற்றிவிட்டு அந்த 3 பேரையும் வெளியே அனுப்பு என சொல்ல, உடனே தனம் கோவப்பட்டு அத்தை இல்லாத நேரத்தில் எது நடக்க கூடாது என நினைத்தேனோ அது நடக்க போகும் போல என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். பின் மீனாவின் அப்பா அந்த பொண்ணை நான் நல்ல பொண்ணு என்று நினைத்தேன் ஆனால் இப்ப வந்தவ சொத்தில் பங்கு கேட்கிறாள் என ஜனார்த்தனன் சொல்கிறார்.

நாகசைதன்யாவுடன் விவாகரத்து – ட்விட்டரில் பெயரை மாற்றிய சமந்தா! ரசிகர்கள் அதிர்ச்சி!

பின் மீனாவிடம் நீ அதை தான் உங்க வீடு என சொல்கிறாய், ஆனால் அந்த பொண்ணு எவ்வளவு விவரமாக இருக்கிறாள் என சொல்லி, பேசாமல் நீ குழந்தை மாப்பிள்ளையை கூட்டிக் கொண்டு நம்ம வீட்டிற்கு வந்துவிடு என சொல்கிறார். பின் ஜனார்த்தனன் உனக்கு வீடா இல்லை என சொல்ல, அந்த பொண்ணு அந்த அர்த்தத்தில் இல்லை என ஜனார்த்தனன் சொல்ல, சொல்லும் விதத்தில் சொன்னால் மாப்பிள்ளை கேட்டுக் கொள்வார், இதோ கண்ணன் பிரிந்து போய்விட்டான் அது போல அவங்க அவங்க குடும்பத்தை பார்க்க வேண்டும் என சொல்கிறார்.

மறுபக்கம் ஐஸ்வர்யா கண்ணன் வீட்டிற்கு வர, ஐஸ்வர்யாவை அப்படி பேசியிருக்க கூடாது என கண்ணன் சொல்கிறார். நீ சும்மா இரு மாமா என சொல்லி எத்தனை நாள் தான் நானும் பொறுமையாக இருப்பது, அத்தையை கடைசியாக பார்க்கும் போது கூட என்னை வெளியே தள்ளி விட்டார்கள், எதிரியாக இருந்தால் கூட கடைசியாக முகத்தை பார்கவிடுவார்கள் நம்ம என்ன அவர்களுக்கு எதிரியா என கேட்க, ஆனால் நீ பேசியது என் அண்ணியை என கண்ணன் சொல்ல, நானும் முதலில் அதான் நினைத்தேன், ஆனால் அவர் எல்லாரும் அசிங்கப்படுத்தும் போது அமைதியாக இருந்தார் அதான் தப்பு என சொல்கிறார்.

திருப்பதி தரிசன டிக்கெட் இல்லாதோர் கவனத்திற்கு – பிரம்மோற்சவத்தில் அனுமதி இல்லை!

அவங்க ஏன் நம்மை கோவிலுக்கு கூப்பிட வேண்டும், இதற்கு தான் போக வேண்டாம் என நான் சொன்னேன் என சொல்ல, நான் கொஞ்சமாவது நல்லது நடக்கும் என நினைத்தேன் என சொல்ல, அந்த நேரம் பார்த்து கஸ்தூரி வருகிறார். சரியாக சொன்ன ஐஸ்வர்யா என சொல்ல, வா உன்னை தான் நான் நினைத்தேன் என ஐஸ்வர்யா சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!