கோர்ட்டில் இருந்து வந்த லெட்டரால் மாட்டிக் கொள்ளும் கோபி, சந்தேகத்தில் எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோர்ட்டில் இருந்து வந்த லெட்டரால் மாட்டிக் கொள்ளும் கோபி, சந்தேகத்தில் எழில் - இன்றைய
கோர்ட்டில் இருந்து வந்த லெட்டரால் மாட்டிக் கொள்ளும் கோபி, சந்தேகத்தில் எழில் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோர்ட்டில் இருந்து வந்த லெட்டரால் மாட்டிக் கொள்ளும் கோபி, சந்தேகத்தில் எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வர அது கோபி உடையது என சொல்லி பாக்கியா அதை பிரிக்க வேண்டாம் என சொல்கிறார். பின் இனியா தன்னுடைய ஆசை பற்றி எழிலிடம் சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வர அதை ஈஸ்வரி படிக்க போகிறார். அப்போது பாக்கியா வந்து அன்னைக்கு எதோ பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார் அதோடு சேர்ந்ததாக தான் இருக்கும் என பாக்கியா சொல்கிறார். ஈஸ்வரி ஆமாம் இதை பிரித்தால் அப்பறம் அவன் திட்டுவான் என செல்ல, செல்வி அதில் எதோ இருப்பது போல எனக்கு சந்தேகமாக இருக்கிறது என சொல்கிறார். பின் இனியாவும் எழிலும் நன்றாக பேசிக் கொண்டிருக்க, ஜெனி வந்து அமருகிறார்.

குழந்தையுடன் இருப்பது போல கனவு கண்ட முல்லை, மீண்டும் தொடங்கிய ஐஸ்வர்யா மீனா சண்டை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அப்போது பாக்கியாவும் வர இன்னும் அவ உன்னிடம் சரியாக பேசவில்லையா என கேட்கிறார். அப்போது எழில் என்ன பிரச்சனை என கேட்க, ஜெனி அந்த டாக்டரிடம் இனியா பேசுவதாக சொல்கிறார். தப்பாக எதுவும் இல்லை ஆனால் அவளுடைய வயது சரி இல்லை என சொல்கிறார். பின் ஜெனியை கவலைப்பட வேண்டாம் என பாக்கியா சொல்கிறார். பின் ஜெனி அதெல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார். எழில் இனியாவை சரி செய்ய வேண்டும் என நினைக்கிறார்.

பின் எழில் இனியா ரூமிற்கு போக இனியா கதவை திறக்கவில்லை. அப்போது இனியா யார் என கேட்க, எழில் நான் பேய் வந்திருக்கேன் என சொல்கிறார். பின் இனியாவை பார்த்து பேச, உனக்கும் ஜெனிக்கும் என்ன பிரச்சனை என கேட்கிறார். அப்போது இனியா என் மீது தவறாக சொல்வதாக சொல்ல , அந்த டாக்டரை ஏன் பிடிக்கும் என கேட்கிறார். அந்த டாக்டரை பார்த்தால் சந்தோசமாக இருக்கு அவர் சந்தோசமாக பேசுகிறார் என சொல்கிறார். பின் எழில் அவருடைய பள்ளி பருவத்தில் சைட் அடித்தது பற்றி பேசி புரிய வைக்கிறார்.

மீண்டும் அப்பா பற்றி கேட்ட லட்சுமி, ஹேமா ஸ்கூலிற்கு பாரதியுடன் வந்த வெண்பா – இன்றைய எபிசோட்!

நான் அந்த வயதில் காதலிக்க மாட்டேன் அது போல நீயும் நன்றாக படிக்க வேண்டும் என சொல்கிறார். இனியா அப்போ நீ இப்போது யாரையாவது லவ் பண்றியா என கேட்க எழில் எதுவும் பேசாமல் சிரிக்கிறார். பின் இனியா என்னிடம் சொல்லமாட்டியா என கேட்கிறார். ராதிகாவிற்கு வக்கீல் போன் செய்து கோர்ட்டில் இருந்து பேப்பர் வந்திருப்பதாக சொல்கிறார். ராதிகா போன் செய்து கோபியிடம் கோர்ட்டில் இருந்து பேப்பர் வந்திருப்பதாக சொல்கிறார். கோபி அதை நினைத்து பதட்டமாக கீழே வருகிறார். அப்போது ஜெனி இனியா இடையே எல்லாம் சரியாகி இருக்கிறது.

பின் கோபி அதை படித்து இருப்பார்களா என நினைத்து பயத்துடன் வருகிறார். கோபியிடம் பாக்கியா பேப்பர் வந்திருப்பதாக சொல்ல, பாக்கியா எங்கே வைத்தேன் என தெரியாமல் தேடுகிறார். எவ்வளவு முக்கியமான பேப்பர் அது அதை பத்திரமாக வைக்கமாட்டியா என கேட்கிறார். கோபி அதை பிரித்து பார்த்தீங்களா என கேட்க அது கோர்ட்டில் இருந்து வந்துள்ளதால் அதை பிரித்து பார்க்கவில்லை என சொல்கிறார். எழில் கோர்ட்டில் இருந்து என்ன லெட்டர் என கேட்க, பாக்கியா எங்கே வைத்தேன் என தெரியவில்லை என சொல்கிறார். கோபியின் நடவடிக்கை பார்த்து எழிலிற்கு சந்தேகம் வருகிறது.

அப்போது பாக்கியா அந்த லெட்டரை கொண்டு வந்து கொடுக்க எழில் அதை கொடு நான் பார்க்கிறேன் என சொல்கிறார். வக்கீல் காத்துக் கொண்டிருக்கிறார் நான் விவரம் சொல்ல வேண்டும் என சொல்ல, பாக்கியா ஒரு லெட்டரை தேடுவதற்குள் என்ன பாடுபட வேண்டியதாக இருக்கிறது என நினைக்கிறார். கோபி ரூமிற்கு வந்து நிம்மதி அடைகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!