பாக்கியா மீது பாசமாக இருக்கும் ஈஸ்வரி, தாத்தாவை பீச் கூட்டி செல்லும் எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா எல்லாரையும் கவனித்து கொள்வதை பார்த்து ஈஸ்வரி சந்தோசப்படுகிறார். அதனால் ஈஸ்வரி பாக்கியா மீது பாசமாக இருக்கிறார். எழில் ஜெனி இனியா தாத்தாவை கடல் பார்க்க அழைத்து செல்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா ஈஸ்வரியை அமர வைத்து சாப்பாடு பரிமாறுகிறார். அப்போது ஈஸ்வரி நீ சாப்பிட்டியா என கேட்க பாக்கியா நான் அப்பறம் சாப்பிடுகிறேன் என சொல்கிறார். உடனே ஈஸ்வரி எங்களை எல்லாம் கவனித்து நீ உன்னை கவனித்துக் கொள்ள மாட்டேங்குற முதலில் அமர்ந்து சாப்பிடு என சொல்லி சாப்பாடு எடுத்து வைக்கிறார். நீ சரியாக தூங்குறியா என்று கூட தெரியவில்லை என பாசமாக பேச செல்வி இத்தனை ஆண்டுகளில் உங்க மாமியார் சாப்பாடு பரிமாறி இன்று தான் நான் பார்க்கிறேன் என சொல்கிறார்.
பின் ஈஸ்வரி நன்றாக சாப்பிடு என பாக்கியாவிடம் பேசமாக பேசுகின்றனர். பின் அனைவரும் தாத்தாவுடன் சேர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க, எவ்வளவு நேரம் தான் இப்படியே டிவி பார்ப்பது என பாட்டி கேட்கிறார். அப்போது எங்கையாவது வெளியே போவோமா என பேச பீச் போகலாம் என இனியா சொல்கிறார். அப்போது ஈஸ்வரி நீங்க எல்லாரும் போங்க என சொல்ல, நீங்களும் வாங்க என சொல்கிறார். பின் அனைவரும் தாத்தாவுடன் பீச் வருகின்றனர்.
பிறந்தநாளுக்கு போக ஹேமாவை தூண்டிவிடும் சௌந்தர்யா வேணு, பாரதி சம்மதிப்பாரா? இன்றைய எபிசோட்!
மறுபக்கம் பாக்கியா ஆபிஸிற்கு செல்ல அங்கே வாங்கிய ஆர்டர் எல்லாத்தையும் வேகவேகமாக செய்கிறார். ஓய்வில்லாமல் அவசர அவரசமாக எல்லாத்தையும் செய்ய அவருக்கு முடியாமல் வருகிறது கொஞ்சம் இடைவெளி விட்டு செய்தால் என்ன என செல்வி கேட்க பாக்கியா முடியாததுடன் எல்லாம் செய்கிறார். பின் தாத்தா பீச் சென்று அங்கே சந்தோசமாக கடல் அலைகளை ரசித்துக் கொண்டிருக்கிறார். இனியாவும் ஜெனியும் கடலில் விளையாட பாட்டி தாத்தா பார்த்து சந்தோசமாக விளையாடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். அப்போது ஈஸ்வரியும் சென்று விளையாட எழில் தாத்தாவை பார்த்துக் கொள்கிறார்.