டாக்டர் மீது பாசத்தை கொட்டும் இனியா, தாத்தாவிற்கு செய்வதை சொல்லி காட்டும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
டாக்டர் மீது பாசத்தை கொட்டும் இனியா, தாத்தாவிற்கு செய்வதை சொல்லி காட்டும் செழியன் - இன்றைய
டாக்டர் மீது பாசத்தை கொட்டும் இனியா, தாத்தாவிற்கு செய்வதை சொல்லி காட்டும் செழியன் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
டாக்டர் மீது பாசத்தை கொட்டும் இனியா, தாத்தாவிற்கு செய்வதை சொல்லி காட்டும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா தாத்தாவை கவனிக்க வந்த பிஸியோதெரபிஸ்ட் மீது மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். பின் தாத்தாவிற்கு செலவு செய்ததை நினைத்து செழியன் கடுப்பாகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா கோபியிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிட்டிங்களா என கேட்கிறார். ஆனால் கோபி என் மனைவியின் சொந்தக்காரர்கள் வந்திருப்பதாக சொல்கிறார். அதனால் என்னால் பத்திரத்தில் கையெழுத்து வாங்க முடியவில்லை என சொல்ல, ராதிகா நான் உங்களை வற்புறுத்தி இதை செய்ய சொல்லவில்லையே என கேட்கிறார். அதெல்லாம் இல்லை என கோபி சொல்ல, எனக்கு அப்படி தான் தோன்றுகிறது. வக்கீல் தான் கேட்டார், அதனால் தான் நான் கேட்டேன் என சொல்கிறார். மறுபக்கம் ஈஸ்வரி பாட்டி தாத்தாவிற்கு குணமாக வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்க, இனியா வந்து டாக்டர் ரஜினிகாந்த் எப்போது வருவார் என கேட்கிறார்.

தமிழகத்தில் பிப்.15க்கு பிறகு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!

உனக்கு என்ன என பாட்டி கேட்க அவர் வந்தால் தானா தாத்தாவிற்கு சீக்கரம் சரி ஆகும் என இனியா சொல்ல, செல்வி வீட்டில் இருக்கும் போது ஏன் இவ்வளவு மேக்கப் உடன் இருக்கிறாய் என கேட்கிறார். பின் ஜெனியிடம் டாக்டர் வண்டி சத்தம் கேட்கிறது அவர் வந்துவிட்டார் என சொல்கிறார். டாக்டர் தாத்தாவை பார்க்க இனியா நீங்க எத்தனை ஆண்டுகளாக வேலை செய்கிறீர்கள் என பல கேள்விகளை கேட்கிறார். இனியாவின் நடவடிக்கைகளை பார்த்து ஜெனி சந்தேகப்படுகிறார்.

பின் பாக்கியா ஜெனியிடம் சொல்லிவிட்டு சமையல் செய்யும் இடத்திற்கு கிளம்புகின்றனர். அங்கே சமையல் ஆர்டரில் இருக்கும் குறைகளை சொல்ல, செல்வியும் அவருடைய பங்கிற்கு பல விஷயங்களை சொல்கிறார். ஆனால் அதை எல்லாம் நீ சொல்லவேண்டாம் என வேலை செய்பவர்கள் சொல்ல பாக்கியா நான் இல்லாத போது செல்வி சொல்வதை கேளுங்கள் என சொல்கிறார். இரண்டு ஆர்டர் வந்தது அதை செல்வி வேண்டாம் என சொன்னதாக அவர்கள் சொல்ல, நான் தான் சொல்ல சொன்னேன் என பாக்கியா சொல்கிறார். அப்போ எங்களுக்கு சம்பளம் என கேட்க அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார்.

மாநிலத்தில் இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமல் – அரசு உத்தரவு!

பின் செழியன் ஜெனி பாக்கியா தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கே பாக்கியா தாத்தாவை உள்ளே அழைத்து செல்ல ஜெனியிடம் செழியன் தாத்தாவிற்கு அதிகமாக செலவாகி விட்டதாக சொல்கிறார். இதுவரை 50 ஆயிரம் நான் செலவு செய்து விட்டதாக செழியன் சொல்ல தாத்தாவிற்கு தான எல்லாம் செய்கிறாய் என ஜெனி சொல்கிறார். அதை எல்லாம் கேட்டு பாக்கியா வருத்தப்படுகிறார். பின் செழியன் எனக்கு மட்டும் ஆதரவாக பேசாதே என சொல்லி கோபப்படுகிறார். பின் பாக்கியா வீட்டிற்கு வர செழியன் சொன்னதை நினைத்து பார்க்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!