மாநிலத்தில் இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமல் – அரசு உத்தரவு!

0
மாநிலத்தில் இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமல் - அரசு உத்தரவு!
மாநிலத்தில் இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமல் - அரசு உத்தரவு!
மாநிலத்தில் இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமல் – அரசு உத்தரவு!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் இரவு ஊரடங்கு உத்தரவு தவிர அனைத்து கோவிட்-19 தடைகளும் நீக்கப்படும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று அறிவித்தார்.

அரசு உத்தரவு:

உலக நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கக்கூடிய கொரோனா 3வது அலை மற்றும் ஓமைக்ரான் பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிகபட்ச தீவிர தன்மையுடன் பரவிக்கொண்டிருக்க கூடிய கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்தியாவில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்து வருகிறது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இந்தியாவில் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நோய் தொற்று அதிகம் பதிவுசெய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மத்திய பிரதேசம் மாநிலத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று வேகமெடுத்து வந்ததால் கடந்த மாதம் அம்மாநில அரசு புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து அறிவித்தது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 3.67 சதவீதமாக இருந்தனர். நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.4 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு நோய்த்தொற்று குறைந்து வரும் நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு தவிர அனைத்து கோவிட்-19 தடைகளும் நீக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

பாரதியிடம் தனது அப்பா பற்றி கேட்ட லட்சுமி, உண்மையை சொல்வாரா? இன்றைய எபிசோட்!

மேலும் பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் விடுதிகள் முழு அளவில் செயல்படலாம் என்றும், அதே நேரத்தில் திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கான வருகை வரம்பு நீக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். தொற்றுநோய் பரவல் முற்றிலும் குறையாததால் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று அவர் கூறினார். மேலும் பொதுவெளியில் இருப்போர் முகக்கவசம் அணிந்தும், கோவிட் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!