தமிழகத்தில் பிப்.15க்கு பிறகு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!

0
தமிழகத்தில் பிப்.15க்கு பிறகு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் பிப்.15க்கு பிறகு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் பிப்.15க்கு பிறகு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் தற்போது அமலில் இருந்து வரும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவுக்கு வருவதால் ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று (பிப்.12) முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.

ஊரடங்கு தளர்வுகள்

நாடு முழுவதும் கடந்த மாதம் துவங்கி பேரலையாக உருவெடுத்த கொரோனா வைரஸின் 3ம் அலை பாதிப்பால் மாநிலங்கள் தோறும் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த ஜனவரி 6ம் தேதி முதல் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இம்முறை முழு முடக்கம் என்ற அளவில் இல்லாமல் தினசரி இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் மூலம் தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வந்த கொரோனா தினசரி பாதிப்புகள் 10 ஆயிரமாக வீழ்ச்சியடைய துவங்கியது.

மாநிலத்தில் இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமல் – அரசு உத்தரவு!

இதனை கருத்தில் கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, பிப்ரவரி 1ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அளித்தது. அந்த வகையில் சுமார் 4 வாரங்களுக்கு பிறகு தமிழகத்தில் இரவு மற்றும் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. அதே போல பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் பிப்ரவரி 1ம் முதல் மீண்டுமாக திறக்கப்பட்டன. மேலும் மத வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது அமலில் இருந்து வரும் கொரோனா தடுப்பு தொடர்புடைய கட்டுப்பாடுகள் பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று (பிப்.12) ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அந்த வகையில் இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து அரசு முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!