பாக்கியாவின் நிகழ்ச்சிக்கு வரும் ராதிகாவின் அம்மா, மாட்டிக் கொண்ட கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா அலுவலகத்தில் சிறப்பு விருந்தினர் வராததால் அலுவலகத்தில் இருந்து பலர் போன் செய்து திட்டுகின்றனர். பின் பாக்கியாவின் கடை திறப்பு விழாவிற்கு மயூராவும் ராதிகாவின் அம்மாவும் வருகின்றனர்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ஏற்பாடு படி சிறப்பு விருந்தினர் வராததால் ராதிகாவின் அலுவலகத்தில் இருப்பவர்கள் போன் செய்து திட்டுகின்றனர். அதனால் ராதிகா கோவமாக இருக்கிறார். பின் மயூரா கிளம்பி வர ட்ரெஸ் நன்றாக இருக்கிறதா என கேட்கிறார். இருக்கிறது எங்கே கிளம்பி இருக்கீங்க என ராதிகா கேட்க, அவர் அம்மா வந்து மறந்துட்டியா இன்று பாக்கியா ஆன்டி கடை திறப்பு விழா, உன்னால் போக முடியாது என்பதால் என்னை போக சொன்ன என ராதிகாவின் அம்மா சொல்கிறார்.
பின் கோபி அங்கே இருக்க ராதிகாவின் அம்மாவும் மயூராவும் வருகிறார்கள். அவர்களை பார்த்து கோபி ஒளிந்து கொள்ள, கோபியின் அப்பாவும் அவரது கண்ணில் படாமல் ஒளிந்து கொள்கிறார். கோபி பண்ண தப்பிற்கு இவர்களை தண்டிக்க வேண்டாம் என அவர் நினைக்கிறார். கோபி செழியனிடம் பேசிக் கொண்டிருக்க, இனியா வந்து போட்டோ எடுக்க கூப்பிட்டார்கள் என சொல்கிறார். ஆனால் செழியன் நான் வரவில்லை என சொல்ல, பின் கோபி எனக்கு முக்கியமான போன் வரும் என சொல்கிறார்.
கோபி அங்கிருந்து கிளம்ப, ராதிகா வீட்டிற்கு வருகிறார். ராதிகா கோவமாக இருக்க, கோபி சாரி சொல்கிறார். உங்களால் முடியாது என தெரிந்தால் சொல்ல வேண்டியது தான என ராதிகா கேட்க, இனிமேல் இப்படி நடக்காது என கோபி சொல்கிறார். எப்போ பார்த்தாலும் பண்ணுவேன் என சொல்லிவிட்டு பண்ணாமல் இருப்பதே வேலையாக இருக்கிறது என ராதிகா கோவப்படுகிறார். அப்போது போன் வர அலுவலகத்தில் இருந்து இது போல பல போன் வருகிறது என சொல்கிறார்.
வீட்டில் அனைவரும் புகைப்படத்தை பார்த்துக் கொண்டு நிகழ்ச்சி பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி வர ராதிகா அம்மாவை ஏன் பார்க்கவில்லை என கேட்கிறார். அப்போது கோபி தந்தை இப்போது தான் பாக்கியா பெரிய தொழில் செய்கிறானே, அலுவலகத்தில் டென்ஷன் இருந்தால் இந்த தொழிலை நீ பண்ணு என சொல்கிறார். அதனால் கோபி கோவப்பட்டு கிளம்பி செல்கிறார். பின் வீட்டில் அனைவரும் கோபி அம்மாவை இப்படி திட்டுவதால் தான் தாத்தா இப்படி நடந்து கொள்கிறார் என சொல்கிறார்கள். கோபி அவரது ரூமில் கோவமாக இருக்க, பாக்கியா வந்து நிற்கிறார், இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.