கயல் பிறந்தநாளை கொண்டாட இருக்கும் குடும்பத்தினர், ஐஸ்வர்யாவை பாசத்துடன் கவனிக்கும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கயல் பிறந்தநாளை கொண்டாட இருக்கும் குடும்பத்தினர், ஐஸ்வர்யாவை பாசத்துடன் கவனிக்கும் தனம் - இன்றைய
கயல் பிறந்தநாளை கொண்டாட இருக்கும் குடும்பத்தினர், ஐஸ்வர்யாவை பாசத்துடன் கவனிக்கும் தனம் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கயல் பிறந்தநாளை கொண்டாட இருக்கும் குடும்பத்தினர், ஐஸ்வர்யாவை பாசத்துடன் கவனிக்கும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா தனது ரூமை கேட்பார் என பதட்டத்தில் இருக்க, தனம் எதுவும் சொல்லாமல் இருக்கிறார். பின் கண்ணன் ஐஸ்வர்யா ஹாலில் படுகின்றனர். பின் கயலின் பிறந்தநாள் விழாவிற்கு குடும்பத்துடன் ஏற்பாடு செய்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் மீனாவை கூப்பிட கண்ணனிற்கு ரூமை கேட்பார் என பயந்து அவர் பதட்டம் அடைகிறார். ஆனால் தனம் கயலுக்கு பாலை கொடுக்க வந்திருக்கிறார். ஜீவா ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் என கேட்க, கண்ணனிற்கு ரூமை கேட்பார்கள் என பயப்படுகிறார். பின் கண்ணன் அம்மா கட்டிலை பார்த்து வருத்தப்பட ஐஸ்வர்யா பாய் மட்டும் தான் இருக்கிறது. நான் அதில் படுகிறேன் என சொல்கிறார். கண்ணன் நான் கிழே படுகிறேன் என சொல்ல, வேண்டாம் உனக்கு அடிபட்டு இருக்கிறது என ஐஸ்வர்யா சொல்கிறார்.

பாரதி கண்ணம்மாவை பார்த்து சந்தோசப்படும் சண்முகம், பேரகுழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

இங்கே கொசு வேற இருக்கிறது. ஒரு போர்வை கிடைத்தால் நன்றாக இருக்கும் என சொல்ல நம்ம வீட்டில் அது எல்லாம் இல்லாமல் தான படுத்தோம் அப்பறம் என கேட்கிறார். அப்போது தனம் வர எங்க ரூமில் வந்து படுக்க சொல்கிறார். வேண்டாம் என ஐஸ்வர்யா சொல்ல, நாளைக்கு எதாவது ஏற்பாடு செய்கிறேன் என தனம் சொல்கிறார். உள்ளே சென்ற தனம் போர்வை தலைகாணி பெட் எல்லாம் கொண்டுவந்து கொடுக்கிறார். எதாவது வேண்டும் என்றால் என்னிடம் கேளு என சொல்கிறார்.

பின் முல்லை ரூமில் அழுது கொண்டிருக்க கதிர் என்ன நடக்கிறது என தெரியாமல் இருக்கிறார். முல்லை பயங்கரமாக அழ ஏன் அழுகிறாய் என கேட்கிறார். இந்த மாதம் எனக்கு குழந்தை வரும் என நான் நினைத்தேன் ஆனால் எனக்கு கிடைக்கவில்லை. எல்லாரிடமும் சொல்லலாம் என எவ்வளவு ஆசையாக இருந்தேன் ஆனால் எல்லாம் முடிந்துவிட்டது என சொல்கிறார். கதிர் இந்த மாதம் இல்லை என்றால் என்ன அடுத்த மாதம் எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – கைரேகை பதிவில் சிக்கல்! முக்கிய கோரிக்கை!

மறுநாள் கயல் பிறந்தநாள் ஜீவா பட்டுபாவாடை வாங்கி வருகிறார். மீனா அவளுக்கு மேக்கப் போட, தனம் கயலுக்கு இனிப்பு செய்கிறார். பின் மூர்த்தி கதிர் கோவிலுக்கு சென்றுவிட்டு வருகிறார்கள். கயல் பிறந்தநாள் என்பதால் எல்லாரும் சந்தோசமாக இருக்க, கயலை மீனா ஜீவா அழைத்து வருகின்றனர். அனைவரும் கயலை தூக்கி கொஞ்ச ஐஸ்வர்யா எல்லாரும் போட்டோ எடுப்போம் என கேட்டு போட்டோ எடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!