எழில் படத்தை பார்க்க சென்ற குடும்பத்தினர், கடைசி வரை வராத கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ஜெனி எழிலிற்கு எதாவது பரிசு வாங்கி கொடுக்க வேண்டும் என சொல்ல செழியன் ஏற்கனவே வாங்கி வைக்கிறார். பின் எழில் படத்தை பார்க்க அமிர்தா மற்றும் பாக்கியா குடும்பத்துடன் வருகின்றனர்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி எழில் படம் செய்தது நினைத்து மிகவும் சந்தோசமாக இருப்பதாக சொல்ல ஆமாம் எனக்கும் தான் என செழியன் சொல்கிறார். பின் ஜெனி எழிலிற்கு எதாவது வாங்கி கொடுக்க வேண்டும் என சொல்ல செழியன் ஏற்கனவே வாங்கி வைத்ததை காட்டுகிறார். அதை பார்த்து ஜெனி மழை எதுவும் வருகிறதா என தெரியவில்லை என்று சொல்கிறார். பின் அமிர்தா வீட்டிற்கு போன பாக்கியாவும் எழிலிலும் நாளைக்கு படம் பார்க்க அவர்களையும் வர சொல்கிறார். அமிர்தா அம்மா எழில் நல்ல மனசிற்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும் என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
பின் செழியன் எழிலை கூப்பிட்டு உனக்கு ஒன்று கொடுக்க வேண்டும் என சொல்லி மாடிக்கு கூப்பிடுகிறார். அப்போது எழிலிற்கு சட்டை வாங்கி கொடுக்க எழில் அதை பார்த்து சந்தோசப்படுகிறார். மறுநாள் குடும்பத்தில் அனைவரும் தியேட்டர் சென்று படம் பார்க்க அமர ஈஸ்வரி நல்ல பெரிய தியேட்டராக தான் இருப்பதாக சொல்கிறார். பின் பணம் கொடுத்த ப்ரொடீசர் எல்லாரும் வருகின்றனர். பின் அமிர்தாவும் அவரது அம்மாவும் வருகின்றனர். படம் தொடங்கியதும் எல்லாரும் எழில் பெயரை பார்த்து சந்தோசப்படுகிறார்கள்.
படம் தொடங்கியதும் சந்தோசப்பட பின் கதையில் வரும் காட்சிகளை பார்த்து வருத்தப்பட்டு அழுகிறார் பாக்கியா. பின் படம் முடிந்துவிட எல்லாரும் எழிலை பாராட்டி பேசுகின்றனர். எழில் என் வெற்றிக்கு அம்மா தான் காரணம் என சொல்ல, பாக்கியா பேச வருகிறார். அப்போது எழில் பையன் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவான் என்பது எனக்கு தெரியும் என சொல்கிறார். அனைவரும் கோபி வருவாரா என காத்திருக்க கடைசி வரை கோபி வரவில்லை.