ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போகும் கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பல அதிரடி திருப்பங்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. இத்தனை நாள் பாக்கியாவிற்கு கோபியால் பிரச்சனை வந்த நிலையில் தற்போது குடும்பத்தால் பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியலில் கதைக்களம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. பாக்கியா தனது 25 வருட திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து இருக்கிறார். கோபி வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்கி இருக்க ராதிகாவை திருமணம் செய்து கொள்ள சொல்லி கெஞ்சுகிறார். ஆனால் ராதிகா இப்போது முடியாது கொஞ்ச டைம் வேண்டும் என சொல்லிவிட கோபி நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என சொல்கிறார்.
மறுபக்கம் கோபி வீட்டை விட்டு வெளியே போனதால் செழியன், இனியா, ஈஸ்வரி என அனைவரும் பாக்கியாவை கிடைக்கும் இடத்தில் எல்லாம் திட்டுகின்றனர். அதனால் பாக்கியாவிற்கு பயங்கர மன உளைச்சலில் இருந்தாலும், காசு இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதால் எதாவது செய்து பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாக்கியா இருக்கிறார். மேலும் மறுபக்கம் ராதிகாவின் அண்ணனும் அம்மாவும் கோபியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கின்றனர்.
தீவிரவாதிகளிடம் மாட்டி கொண்ட கண்ணம்மா, காப்பாற்ற செல்லும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ட்விஸ்ட்!
ராதிகா அதற்கு மறுப்பு தெரிவிக்க ஆனால் அவர்கள் ராதிகா பேச்சை கேட்காமல் திருமண ஏற்பாடுகளை செய்கின்றனர். இந்த உண்மை பாக்கியாவிற்கு தெரிய வந்தால் என்ன ஆகும், இன்னும் பாக்கியா கழுத்தில் கோபி கட்டிய தாலி இருக்கிறது என்பதால் அவர் எடுக்க போகும் முடிவு என்ன என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. அது மட்டுமில்லாமல் கோபி ராதிகாவின் திருமணத்தை குடும்பத்தினர் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்