பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் முடிவு என்ன? ப்ரோமோ வெளியீடு! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த 2 வாரங்களாக எதிர்பார்க்காத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் பாக்கியா மொத்த குடும்பத்தையும் விட்டு விட்டு வெளியே சென்று விட்டார். இந்நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
ப்ரோமோ வெளியீடு:
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில வாரங்களாக டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது. கோபி பற்றிய உண்மை முதலில் ராதிகாவுக்கு தெரிந்தது. இதை தொடர்ந்து ராதிகா, பாக்கியாவிற்கு துரோகம் செய்ய கூடாது என்ற எண்ணத்தில் மும்பைக்கு தன் மகளோடு செல்ல முடிவு எடுத்துவிட்டார். இருப்பினும் கோபி மீண்டும் ராதிகாவை தொந்தரவு செய்தார், இதனால் கோபி – ராதிகாவுக்கு இடையே சண்டை. அடுத்த சில நாட்களில் ராஜேஷ் கோபி வீட்டுக்கு வந்து சண்டை போடுகிறார். இந்த குழப்பத்தில் வீட்டில் இருக்கும் எல்லோரும் கோபிக்கு ஃபோன் செய்தனர்.
TN Job “FB Group” Join Now
அதன் பின்பு கோபிக்கு கார் விபத்து நிகழ அவர் ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆனார். இந்த நேரத்தில் கோபியை பார்க்க ராதிகா ஆஸ்பிட்டல் வருகிறார். இருவரும் பேசியதை பாக்கியா பார்த்து விட்டார். இதனால் துக்கத்தில் உறைந்து போன பாக்கியா வீட்டிற்கு வந்து கோபியிடம் விவாதம் செய்கிறார். மேலும் கோபி-ராதிகா உறவு பற்றிய முழு உண்மையும் வீட்டிற்கு தெரியவந்தது அதாவது எல்லாத்துக்குமே காரணம் ராதிகாதான அத்தை என்று பாக்கியலட்சுமி சொல்ல, கோபியின் முகம் அதிர்ச்சியில் உறைகிறது. மேலும் நீங்க பெரிய நடிகர், சொந்த குடும்பத்தையே ஏன் ஏமாத்துனீங்க, இதுல உங்களுக்கு என்னங்க கெடச்சுது’ என்று குடும்பத்தினர் முன்னிலையில் கோபி மீது எரிமலையாய் வெடிக்கிறார் பாக்கியலட்சுமி.
TN TRB 1060 விரிவுரையாளர் தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு !
நீங்க சந்தோஷமா வாழுங்க கோபி கூறிவிட்டு பாக்கியா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இந்நிலையில் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் ராதிகா, மயூவை அழைத்து கொண்டு மும்பைக்கு செல்ல கிளம்புகிறார். அப்போது ராதிகாவின் அம்மாவும், அண்ணனும் ராதிகாவை தடுக்கிறார்கள் ஊருக்கு போக வேண்டாம், கோபி உன் மேல பாசமா தான இருக்காரு, அவரை ஏத்துக்கோ என்று ராதிகா அம்மா, ராதிகாவின் மனசை மாற்ற முயற்சி செய்கிறார். இதையடுத்து ராதிகா என்ன முடிவு எடுப்பார், மனசு மாறி கோபியை ஏற்றுக் கொள்வாரா? இல்லை மும்பைக்கு சென்று விடுவாரா? என பல கேள்விகளுடன் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.