பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு – விரைவில் புதிய பாடத்திட்டம்! கேரள அரசு அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்பிக்கும் வகையில் கேரள அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கேரளா மாநிலத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய பாடத்திட்டம் ஒன்றை அரசு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
பாடத்திட்டம்:
இந்தியாவில் பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF) என்ற திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இதன் நோக்கம் 1-8ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதே ஆகும். இந்த நிலையில் கேரள மாநிலத்தில் உருவ கேலிக்கு (Body shaming) எதிராக மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அம்மாநில பள்ளியில் அண்மையில் ஒரு மாணவன் உருவ கேலிக்கு ஆளான நிகழ்வை பகிர்ந்து கொண்ட கல்வித்துறை அமைச்சர் உருவ கேலி செய்வது மிகவும் மோசமான செயல் என்று கூறியுள்ளார். இதனால் ஏராளமானோர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்றும் வேதனை தெரிவித்துள்ளார். அதனால் மற்றொரு சக மனிதரை அவரின் நிறத்தை, உருவத்தை வைத்து கேலி செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பள்ளிகளில் இது போன்ற நிகழ்வுகளை தடுக்க மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.என்று தெரிவித்துள்ளார்.