ட்விட்டரின் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கை .. முன்னறிவிப்பின்றி வேலையில் இருந்து தூக்கப்பட்ட 4,400 ஊழியர்கள்!
ட்விட்டர் நிறுவனம் அடுத்தடுத்து தொடர்ந்து பல வகையான அதிரடி நடவடிக்கைகளை செய்து வரும் நிலையில், தற்போது 4,400 தற்காலிக ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்துள்ளது.
பணி நீக்கம்:
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு வாங்கிய பிறகு எலான் மஸ்க் யாரும் எதிர்பார்க்காத பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். நிர்வாகத்தின் அடிப்படையிலும், செயலியின் பயன்பாட்டிலும் செய்யப்படும் மாற்றங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பும் வகையில் உள்ளது. ட்விட்டரின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சரி பாதியான 3,700 பேரை கடந்த வாரத்தில் முழுவதுமாக பணி நீக்கம் செய்த பிறகு இனி எந்த வித நீக்கமும் நிறுவனத்தில் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.
“Doodle For Google” போட்டி – 2022 ஆம் ஆண்டின் வெற்றியாளர் இவர்தான்.. அறிவித்த கூகுள்!
Exams Daily Mobile App Download
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது நிறுவனத்தின் 5,500 மொத்த ஊழியர்களில் 4,400 பேர் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழியர்கள் பணி தொடங்குவதற்காக ஆரம்பிக்கும் போது செயலியின் நிர்வாக அணுகலை பெற முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அதன்பிறகு தான் பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து அவர்களுக்கு தெரியவந்துள்ளது. முக்கிய சமூகவலைத்தள நிறுவனத்தில் இத்தனை பேர் எந்த ஒரு முன்னறிவிப்பின்றி நீக்கப்பட்டது சமூகவலைத்தளத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.