மத்திய அரசின் விருதிற்கு தமிழகத்தின் 8 காவலர்கள் தேர்வு!
இந்தியாவில் குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுக்கு இந்தாண்டு தமிழகத்தில் இருந்து 8 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
காவலர்களுக்கு விருது:
இந்தியாவில் சட்ட ஒழுங்கினை பாதுகாப்பதில் காவலர்களின் பங்கு இன்றியமையாததாகும். நாட்டின் இக்கட்டான சூழ்நிலைகளில் தன் நலம் பாராது, பொதுநல நோக்குடன் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்றின் போது நோய் பரவும் அச்சத்திலும், ஊரடங்கிற்கு மத்தியில் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கொரோனாவால் நாடு முழுவதும் ஏராளமான காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
8000 பேரை ப்ளாக் செய்த “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!!
காவலர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பதவி உயர்வுகளும் அளிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் குற்றப்பிரிவு வழக்குகளில் சிறப்பான விசாரணை மேற்கொள்பவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கப்படும். இந்த வருடம் புலன் விசாரணை விருது வழங்குவதற்காக அனைத்து மாநிலங்களிலும் இருந்து 152 குற்றப்பிரிவு காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அதில் இந்தாண்டு தமிழகத்தில் இருந்து சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன், சிதம்பர முருகேசன், கண்மணி ஆகிய 8 காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் மத்தியப் பிரதேசத்தில் 15 பேரும், மகாராஷ்டிரத்தில் 11 பேரும், கேரளாவில் 9, ராஜஸ்தான் 9, பீகார் 7, குஜராத் 6, கர்நாடகா 6 மற்றும் டெல்லியில் 6 காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான விருதை ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவன்று மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.