தமிழக 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எதிரொலி – இதனை தவிர்க்க வேண்டும்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் தற்போது 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 – 2023 ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 13ம் தேதியும் 11-ம் வகுப்பிற்கு மார்ச் 14ம் தேதியும் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை மாணவர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேர்வுகள் முடிவடையும் வரை எந்த பகுதியிலும் மின்தடை செய்யப்பட கூடாது. மேலும் தேர்வு மையங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல மாணவர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையத்தை சென்றடைய ஏதுவாக பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை? வைரஸ் பரவல் எதிரொலி – அமைச்சர் விளக்கம்!
அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சேலம் மாவட்டம் ஜாரி கொண்டலாம்பட்டி கோவிலில் நடைபெறவுள்ள பங்குனி விழாவை பொதுத்தேர்வை முன்னிட்டு ஒத்திவைக்க கோரி முருகேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை கோவில் திருவிழாகளில் ஒலிபெருக்கியை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.