செப்டம்பர் 2 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு, இரவு ஊரடங்கு அமல் – ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு!
ஆஸ்திரேலியா நாட்டின் மிகப்பெரிய நகரான மெல்போர்னில் புதிய கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்ட அரசு அப்பகுதியில் மட்டும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து, இரவு ஊரடங்கு உத்தரவை மீண்டும் அமல்படுத்தியது.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா பேரலை தடுப்பு நடவடிக்கைகளாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து ஆஸ்திரேலியா அரசு உத்தரவிட்டுள்ளள்ளது. அந்த வகையில் தற்போது நாட்டின் சில பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த பொது முடக்கமானது ஆகஸ்ட் 19 ஆம் தேதியுடன் முடிவடையவிருந்தது. இந்நிலையில் அந்நாட்டின் முக்கிய நகரான மெல்போர்னில் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகள் அனைத்தும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் என ஆளுநர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் திறப்பு – வணிகர் சங்கம் முடிவு!
இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட சில நகரங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் அந்நாட்டில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்புகள் புதிய எழுச்சி கண்டு வருகிறதாக அறிக்கை தெரிவித்துள்ளது. தவிர இதற்கு முன்பாக மெல்போர்ன் நகரில் மட்டும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பட்ஜெட் உரை மீதான விவாதம் – இன்று தொடக்கம்!
இதனிடையே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இரவு ஊரடங்கு உத்தரவானது மெல்போர்ன் நகரில் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவில், ‘ஊரடங்கு விதிகள் தினசரி இரவு 9 மணி முதல் கடைபிடிக்கப்படும். எனவே இவ்வகையான கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்குமாறு மக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் மெல்போர்னில் நேற்று ஒரு நாளில் (ஆகஸ்ட் 15) மட்டும் 22 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.