இன்று முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் திறப்பு – வணிகர் சங்கம் முடிவு!
கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்ட நகராட்சி பகுதிகளில் செயல்படும் கடைகள் மாலை 5 மணிக்கு மூடப்படும் என வணிகர்கள், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
கடைகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் தினசரி 35 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இதனால் தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைந்தது. எனவே ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று உயரத் தொடங்கி உள்ளது.
அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் RBI முக்கிய எச்சரிப்பு – ஆன்லைன் மோசடி!
இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரங்களில் சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளை மாலை 5 மணிவரை மட்டுமே திறந்திருக்க ஒத்துழைப்பு வழங்குவதாக வணிகர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்த கட்டுப்பாடுகள் ஒரு வாரத்திற்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.31,000/- ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை !
எனவே இன்று (ஆகஸ்ட் 16) முதல் நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், மொத்த வியாபார நிறுவனங்கள், கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட அனைத்து வணிக நிறுவனங்களும் மாலை 5 மணிவரை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களும் இதனை கருத்தில் கொண்டு பணிகளை திட்டமிட்டு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.