தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகள் கவனத்திற்கு – வாரத்தில் இருமுறை வேலைவாய்ப்பு முகாம்!
கோவையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இளைஞர்களின் நலனுக்காக இனிமேல் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
வேலை வாய்ப்பு முகாம்:
படித்து முடித்து வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்புத் துறை சார்பாக வேலைவாய்ப்பு முகாம்கள் பல மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக எந்த நிறுவனங்களிலும் புதிதாக இளைஞர்களை வேலையில் பணியமர்த்தவில்லை. தற்போது கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்த காரணத்தினால் பல மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 10 மணி முதல் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்களுமே இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள வயது வரம்பு எதுவும் கிடையாது.
மத்திய அரசின் PM KISAN திட்ட பயனர்கள் கவனத்திற்கு – ‘இந்த’ நாளில் பணம் டெபாசிட்!
விருப்பமும், தகுதியும் பெற்ற இளைஞர்கள் தங்களது Resume மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களை கொண்டு வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள இருப்பதால் இளைஞர்களை தவறாது கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நேரில் வர இயலாதவர்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in என்கிற இணையதள முகவரிக்கும் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரரின் Resume ஐ [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.